கோவை, மே 21- மழை நீரை தேக்கிடும் வகையில் தடுப்ப ணைகள் கட்ட வேண்டும் என தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மதுக்கரை ஒன்றிய மாநாட் டில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுக்கரை ஒன்றிய 5 ஆவது மாநாடு சனி யன்று மலுமிச்சம்பட்டி நடைபெற்றது. செட் டிபாளையம் சாலை சிவசாமி தோட்டத்தில் நடைபெற்ற இம்மாநாட்டிற்கு ஒன்றிய தலைவர் ஏ.சிவசாமி தலைமை வகித் தார். ஒன்றியக்குழு உறுப்பினர் சண்முகம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் வி.ஆர். பழனிச்சாமி துவக்க உரையாற்றினார். ஒன் றிய செயலாளர் எம்.மணியன் அறிக்கையை முன்வைத்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுக்கரை ஒன்றிய செய லாளர் பஞ்சலிங்கம், எஸ்.கருப்பையா ஆகி யோர் வாழ்த்தி உரையாற்றினர். இம்மாநாட்டில் மழைநீரை தேக்கி வைத் திடும் வகையில் மதுக்கரை ஒன்றிய பகுதி களில் தடுப்பு அணைகள் கட்ட வேண்டும். நொய்யல் ஆற்று குளங்கள் அனைத்தை யும் தூர்வார வேண்டும்.கால்நடைகள் வளர்ப்பிற்கு மானியத்துடன் கடன்களை மாநில அரசு வழங்கிட வேண்டும். தேங்காய் மற்றும் பாலுக்கு உரிய விலை விவசாயிக ளுக்கு கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, இம்மாநாட்டில் சங்கத்தின் ஒன்றிய தலைவராக மணியன், செயலாள ராக எஸ்.சி சண்முகம், பொருளாளராக ராஜா உள்ளிட்ட 15 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. முடிவில், மாவட்ட தலைவர் வி.பி.இளங்கோவன் மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றி னார்.