districts

கனமழையால் சாய்ந்த பயிர்கள்: விவசாயிகள் கண்ணீர்

சேலம், அக்.8- எடப்பாடி பகுதியில் சனியன்று  இரவு பெய்த கனமழையால் பயிர்கள் சாய்ந்தன. மேலும், விளைநிலங்க ளில் தேங்கியுள்ள வெள்ளதால் நெற் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ள தால் விவசாயிகள் கவலையடைந் துள்ளனர். சேலம் மாவட்டத்தில் நடப் பாண்டு தென்மேற்கு பருவமழை சரி வர பெய்யவில்லை. எனினும் ஓரளவு மழை பெய்தது. கடந்த சில நாட்க ளுக்கு முன்பு மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மழை பெய்தது. குறிப்பாக சேலம், தம்மம் பட்டி, எடப்பாடி, மேட்டூர், ஏற்காடு,  சங்ககிரி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இங்கு  பல மணி நேரம் இடைவிடாமல் மழை பெய்தது. இதனால் கிணறுகள், குளங் கள், குட்டைகள், ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் முழு கொள் ளளவை எட்டி உள்ளதால் மதகுகள், ஓடைகள், வாய்க்கால்கள் வழியாக தண்ணீர் வெளியேறுகிறது. இத னால் பல்வேறு இடங்களில் விவசாய பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மலர்  சாகுபடி, காபி, அழகு செடிகள், தென்னை மர கன்றுகள், நெற்பயிர் கள், வெண்டைக்காய், தக்காளி, மிள காய், புதினா, கொத்த மல்லி, சோளம், மரவள்ளிக்கிழங்கு, கரும்பு உள்ளிட் டவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது விவசாய பணிகள் தீவிர மாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், எடப்பாடி மற்றும்  அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சனி யன்று பகலில் வெயிலின் தாக்கம் ஓர ளவு இருந்தாலும், பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதையடுத்து நள்ளி ரவு நேரத்தில் திடீரென இடி, மின்ன லுடன் கனமழை கொட்டியது. இத னால் மழை வெள்ளம் சாலைகளில் கரைபுரண்டு தாழ்வான பகுதிகளில் பாய்ந்தோடியது எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் மழை வெள் ளம் குளம்போல் தேங்கியது. குறிப் பாக, எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி,  கூடக்கல், குப்பனூர், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப் பளவில் விவசாய பணிகள் மேற் கொண்டிருந்தனர். நள்ளிரவில் பெய்த மிக கனமழைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் அப்பகுதியில் பயி ரிடப்பட்டிருந்த சோளம், வாழை, பருத்தி, நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாய்ந்தன. பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி உள் ளிட்ட பகுதிகளில் நெல் நடவு செய் யப்பட்டு இருந்த வயல்களில் தண் ணீர் அதிகளவு தேங்கி உள்ளது. இத னால் நெற்பயிர்கள் அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், வயல்களில் தேங் கிய தண்ணீரை வெளியேற்றும் பணி யில் விவசாயிகள் தீவிரம் காட்டி  வருகின்றனர். மேலும், இப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சோளப் பயிர் மழைக்கு தாக்குப்பிடிக்க இயலா மல் சாய்ந்தன. இதனால் விவசாயி கள் கவலை அடைந்துள்ளனர். இத னிடையே மழைப் பாதிப்புகள் குறித்து அப்பகுதியில் வருவாய்த்துறையினர் மற்றும் வேளாண் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.