districts

img

உழவர் சந்தை விரைவில் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம், ஜன.11- வாழப்பாடியில் ரூ.58 லட்சம் மதிப் பீட்டில் 16 கடைகளுடன் உழவர் சந்தை  அமைக்கப்பட்டு, விரைவில் திறக்கப் படும் என்பதால் வாழப்பாடி சுற்றுப்புற கிராம விவசாயிகளும், நுகர்வோர் களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதி கிராமங்களில் விளைவிக்கப்படும் தக் காளி, தேங்காய் உள்ளிட்ட அனைத்து காய்கறிகள், வாழைத்தார், தேங்காய், பல்வேறு வகையான பூக்கள் உள்ளிட்ட விவசாய விளைப்பொருட்களை வாழப்பாடியில் இயங்கும் தனியார் தரகு மண்டிகளிலேயே விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். எனவே, விவசாயிகள் அன்றாடம் அறு வடை செய்யும் காய்கறிகளை, நுகா்வோரிடம் நேரடியாக விற்பனை செய்வதற்கு வசதியாக, வாழப்பாடி யில் உழவர் சந்தை அமைக்க வேண்டு மென வாழப்பாடி, சுற்றுப்புற கிராமங்க ளைச் சேர்ந்த விவசாயிகளும், நுகர் வோர்களும், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து, தமிழ்நாடு அரசு  வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை சார்பில், வாழப்பாடியில் உழவர் சந்தை அமைக்க முன்வந்தது. இத்திட் டத்துக்கு தமிழக அரசு ரூ.58 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, அலுவலக அறை, பொருள் பாதுகாப்பு அறை, 16 கடைகள், சுற்றுச்சுவருடன் உழவர் சந்தை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இறுதிக்கட்டத்தை எட்டியது. விரைவில் வாழப்பாடியில் உழவர் சந்தை திறக்கப்படும் என்ப தால், வாழப்பாடி பகுதி விவசாயிக ளும், நுகர்வோர்களும் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.