districts

img

நூறு ஆண்டு கடந்தும் சாகுபடி நிலங்களுக்கு பட்டா வழங்கவில்லை

கரடு, முரடாக இருந்த நிலத்தை சமன் செய்து நூறு ஆண்டுகள் கடந்து விவசாயம் செய்து வருகிறோம். வனத்துறையின் அத்து  மீறல் நடவடிக்கையால் எங்களின் சாகுபடி  நிலங்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்பட வில்லை என பாலக்கோடு வட்டத்தில் உள்ள ஊராட்சி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட் டத்தில்  பிக்கனஅள்ளி, ஜிட்டாண்ட அள்ளி, மாகந்திரமங்கலம், அண்ணாமலைஅள்ளி, ஐக்கசமுத்திரம் ஆகிய ஊராட்சிகள் உள்ளன.  இந்த ஊராட்சிகுட்பட்ட சுமார் 40 கிராமங் களில் ஏறத்தாழ 2000 குடும்பங்கள் வசித்துவரு கின்றனர். இங்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், இருளர், குருமன்ஸ் ஆகிய சமூக  மக்கள் வசிக்கின்றனர். மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் இந்த விவசாயிகள் 100 ஆண்டுகளாக மேற்கண்ட ஊராட்சிகளில் சுமார்

 5000 ஏக்கரில் தங்கள் அனுபவத்தில் சாகுபடி செய்து வருகின்றனர். அரை ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை வைத் துள்ள சிறுவிவசாயிகள், நஞ்சை புஞ்சை என  இருவகை நிலங்களிலும் மா, தென்னை, வாழை, நாகமரம் ஆகிய செடி வகையும், நெல், ராகி,தக்காளி, சோளம் கம்பு,  காய் வகைகள் என பயிரிட்டு  அதில் கிடைக்கும் வருவாயில்  வாழ்க்கையை நகர்த்தி வரு கின்றனர். இந்த விவசாய நிலங் களில் நூறு ஆண்டுகளுக்கும் மேல் 5 தலைமுறைகளாக இம்மக்கள் விவசாயம் செய்து  வருகிறனர். இவர்களுக்கு வேறு வாழ்வாதாரம் ஏது மில்லை. இவர்களில் பெரும் பகுதி விவசாய நிலத்திலேயே  வீடுகட்டி குடியிருந்து வருகின் றனர். இம்மக்களுக்கு, தமிழக அரசு மின்  இணைப்பு, குடிநீர் வசதி, ரேசன் கடை பள்ளிக் கூட வசதி, ஆதார் அட்டை, வாக்காளர் அடை யாள அட்டை என குடிமக்களுக்கு செய்து தர வேண்டிய அத்துனை வசதிகளும் செய்து  தரப்பட்டுள்ளது. கரடுமுரடாக இருந்த  நிலத்தை  தங்களது சொந்த உழைப்பில் சமன் செய்து நிலத்தை சீர்திருத்தம் செய்தனர். தருமபுரி, கிருஷ்ணகிரி ஒன்றுபட்ட மாவட்டமாக இருந்த போது கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் மூலம் இந்த சாகுபடி விவ சாயிகளுக்கு பட்டா வழங்கியுள்ளனர்.   இந்நிலையில், 1988ஆம் ஆண்டு சாகு படி செய்து வரும் விவசாயிகளின் நிலங் களை வருவாய் துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்து விட்டதாக கூறி விவசாயிகளை வனத்துறையினர் வெளியேற்ற முயற்சிக் கின்றனர். 

இது குறித்து பிக்கன அள்ளி ஊராட்சி எடுத்துவச்ச குண்டு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்ற விவசாய கூறுகையில், எங்க  குடும்பத்திற்கு 5 ஏக்கர் நிலம் உள்ளது. மா, வாழை பயிர் வகைகளை விவசாயம் செய்து  வருகிறோம். வனத்துறையை சேர்ந்த பாலக் கோடு ரேஞ்சர் நடராஜன் நாங்கள் வைத்துள்ள மா செடி ஒன்றுக்கு ரூ 23 வரிகட்டவேண்டும். இல்லை என்றால் உங்கள் நிலத்தை எவிசன் செய்துவிடுவோம் என மிரட்டுகிறார். பல இடங் களில் மா விவசாயிகளிடம் மாங்காய் சீசன் வரும் போது வண்டியில் மாங்காய் லோடு ஏற்றி மார்க்கெட்டுக்கு எடுத்துசெல்லும் போது   விற்க்கும் போது அதனை தடுத்து ரூ. 50 ஆயிரம்   கொடுங்கள், ரூ.80 ஆயிரம் கொடுங்கள் என  மிரட்டி பணம் வசூல் செய்கின்றனர். விவசாயி கள் வனத்துறைக்கு பயந்து பணத்தை கட்டி விடுகின்றனர். பணம் கட்டியதற்கான ரசீதுகள் வழங்கப்படுவது இல்லை. மா செடிகள் கடந்த  5 ஆண்டுகளாக வறட்சியினால் பெரிய மகசூல் இல்லை இதனால் மா விவசாயிகள் நஷ்டமடைகின்றனர் என்றார். 

பிக்கன அள்ளி, பிய்குட்டைபாறை, இருளர் சமூகத்தை சேர்ந்த குமார் கூறுகையில், நாங்கள் இருளர் இனத்தை சேர்ந்தவர்கள் எங்கள்  மூதாதையர்கள் வனத்தின் ஓரம் தனித்தனியாக  குடிசை அமைத்து 15 குடுமபங்கள் வசித்து வரு கிறோம். எங்களுக்கு அரை ஏக்கர் முதல் இரண்டு ஏக்கர் வரை மட்டுமே நிலம் உள்ளது. இதில் மா ,சோளம், கம்பு, தொவரை அவரை, பூசணிக்காய் ஆகியவற்றை பயிரிட்டு வந் தோம். வனத்துறையின் கெடுபிடியால் எங்க ளால் விவசாயம் செய்ய முடியவில்லை. நாங்கள் வாழ வழியில்லாமல் ஓசூர், பெங்களூ ருக்கு சென்று கூலி வேலை செய்துவரு கிறோம் என்கிறார்.  தண்ணிபாறையை சேர்ந்த விவசாயி சின்னகுழந்தை கூறுகையில், கரடு முரடான  நிலத்தை எங்கள் அப்பா சமன் செய்தார். இதில்,  விவசாயம் செய்து வருகிறோம்.நாங்கள் நிலத்திலேயே வீடுகட்டி பேரப்பிள்ளைகளுடன்  குடியிருந்து வருகிறோம். விவசாயத்தில் கிடைக்கும் சிறுவருமானத்தில் பிழைத்து வரும் நாங்கள் தற்போது வனத்துறை கெடுபிடியால் விவசாயம் செய்யமுடியவில்லை, எங்களுக்கு இந்த நிலத்தை விட்டால் வாழ்வாதாரம் இல்லை. இதையும் பிடிங்கி கொண்டால், சாவதை தவிர வேறு வழியே இல்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இன்று போராட்டம்

வன உரிமைச் சட்டம் 2008, பிற சமுதாய மக்களுக்கும் வழங்கியுள்ள உரிமைகளின் படி  நிலைப்பட்டா வழங்க வேண்டும். வருவாய்த் துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்ததாக கூறும் உத்தரவை திரும்ப பெற வேண்டும். மாமரங்களுக்கு வரி கேட்டு நிர்பந்தம் செய் வதை கைவிடவேண்டும். நூறு ஆண்டுகளாக விவசாயிகள் சாகுபடி செய்து வரும் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்கவேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு  விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் ஆகஸ்ட் 7 ஆம்  தேதி (இன்று)  தருமபுரி மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபடுகின்றனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க அகில இந்திய இணைச்செய லாளர் டி.ரவீந்திரன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.டில்லி பாபு, விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள், மாவட்டச் செயலாளர் சோ.  அருச்சுணன், மாவட்டத் தலைவர் எம்.குமார், மலைவாழ் சங்க மாவட்டச் செயலாளர் கே.என். மல்லையன், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. நாகராசன் விவசாயிகள் சங்க வட்ட தலைவர் ஜி. நக்கீரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் டி.எஸ்.ராமச்சாந்திரன் உள்ளிட் டோர் தலை காய்ந்த மக்களின் உரிமைக்காக போராட்ட களம் காண இருக்கின்றனர். - லெனின்