districts

img

விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை, ஜன.29- சீரபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள லே - அவுட் டால் விவசாய நிலம் பாதிப்படைவதாகக் கூறி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் தனர். கோவை மாவட்டம், சீரபாளையம் கிராமத்தில் பழனிச் சாமி என்பவர் சுமார் 5 ஏக்கர் நிலத்தில், தென்னை விவ சாயம் செய்து வருகிறார். இவரது விவசாய பூமிக்கு அருகில்  செந்தூர் எலைட் டெவலப்பர்ஸ் என்ற பெயரில் லேட் - அவுட் உள்ளது. இந்த லே அவுட்டில் இருந்து, மழைக் காலங்களில் வரும் மழைநீர், பொதுமக்களால் வெளியேற் றப்படும் கழிவு நீர், குப்பை கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் போன்றவை போதிய வடிகால் வசதி கட்ட மைப்பு இல்லாமல், நேரடியாக பழனிச்சாமியின் விவசாய பூமிக்குள் வந்து சேர்கிறது. இதனால் விளை நிலங்கள் மாசடைகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை இல்லை.   எனவே இதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மனைப்பிரிவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு உடந்தையாக இருந்து வரும்  ஊராட்சி செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து  தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் தனர். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தி னர், பதாகைகளை ஏந்தி கோரிக்கை முழக்கமிட்டனர்.