districts

img

கோணி சாக்குக்கு சந்தை விலை வழங்குக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

ஈரோடு, ஆக.22- கோணி சாக்கிற்கு சந்தை விலை வழங்க  வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்துள் ளனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அந்தியூர் ஒழுங்குமுறை  விற்பனைக்கூட கண்காணிப்பாளரிடம் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவித்திருப்ப தாவது, அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு, விவசாயிகள் பருத்தியை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக் கமான ஒன்று. அவ்வாறு பருத்தியை கொண்டு வரும் விவசாயிகளின் கோணி சாக்கு ஒன்றுக்கு அரசின் சார்பில் ரூ.9 மட்டும்  வழங்கப்படுகிறது. ஆனால் வெளி மார்க் கெட்டில் விவசாயிகள் ஒரு கோணி சாக்கை  ரூ.45 கொடுத்து வாங்குகின்றனர். இதனால் விவசாயிகள் நட்டமடைகின்றனர். இந்த நட்டத்தை ஈடு செய்யும் வகையில்,  பருத்தி விவசாயிகளுக்கு ஒரு கோணி சாக்குக்கு ரூ.45 வழங்க வேண்டும். கோணி சாக்கு பணம் வங்கியில் செலுத்தப்படுவது குறித்த சந்தேகங்களுக்கு உரிய முறையில் பதில் கொடுக்க வேண்டும். மேலும், விவ சாயிகள் கொண்டு வரும் பருத்தி மூட்டை களை நவீன மின்னனு எடை மிசின்கள் மூலம்  எடைபோட வேண்டும் என தெரிவித்துள் ளனர். முன்னதாக, கோரிக்கை மனு அளிக் கையில், தவிச மாவட்டத் தலைவர் எஸ்.வி். மாரிமுத்து, தாலுகாப் பொருளாளர் ஆர்.கணேசன், தாலுகாக்குழு உறுப்பினர் எஸ்.துரைசாமி மற்றும் திரளான விவசாயிகள் பங்கேற்றனர். மனுவை பெற்றுக்கொண்ட கண்காணிப்பாளர் கோரிக்கையை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல் வதாக உறுதியளித்தார்.