districts

img

யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு வனத்துறையை கண்டித்து பொதுமக்கள் மறியல்

உதகை, ஜூலை 8- ஓவேலி பகுதியில் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார். வனத் திற்குள் யானையை உடனடியாக விரட்ட வேண்டும் என வலியுறுத்தி சடலத்துடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள  ஓவேலி பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி  அமைந்துள்ளது. இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், தேயிலை தோட்டங்கள் உள் ளன. கடந்த ஜூன் மாதம் இப்பகுதியில் இரண்டு பேர் காட்டுயானை தாக்கியதில் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து துணை  வனக்காப்பாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர், முதுமலை கும்கி யானைகளுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஓவேலி செல்வபுரம்  பகு தியை சேர்ந்த விவசாயி நாதன் (48) என்பவர், காமராஜ் நகரில் ஒரு எஸ்டேட்டை குத்தகை எடுத்து தேயிலை பறித்து வந்தார். வெள்ளி யன்று மதியம் தேயிலை பறித்த பின் மூட் டையை சுமந்துக்கொண்டு சாலைக்கு வரும்போது அங்கிருந்த காட்டுயானை தாக் கியதில் நாதன் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார்.

இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காட்டு யானைக ளால் தொடர்ந்து உயிரிழப்பு ஏற்படுகிறகிறது என்கிற நிலையில் ஆவேசமடைந்த பொது மக்கள் ஐநூறுக்கும் மேற்பட்டோர் குவிந்த னர். மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என வலியுறுத்தினர்.  இதன்பின் நாதனின் சடலத்துடன் கூட லூர் சிக்னல் பகுதியில் சாலையில் அமர்ந்து  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு  வந்த காவல் மற்றும் வனத்துறையினர் போராட் டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண் டனர். இதில், சமாதனமடையாத பொது மக்கள் கொட்டும் மழையில் குடைப்பிடித்துக் கொண்டு போராட்டத்தை தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அம் ரித், முதுமலை புலிகள் காப்பக கள இயக்கு நர் வெங்கடேசன், வட்டாட்சியர் சரவண கண் ணன், காவல் துணை கண்காணிப்பாளர் குமார் உட்பட அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சு வார்த்தை மேற்கொண்டு வருகின்றனர்.  இதுகுறித்து வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் உதகையில் செய்தியாளர் களிடம் கூறுகையில், “பொதுமக்களின் பாது காப்பிற்காக நூற்றுக்கும் மேற்பட்ட வனத் துறையினர் கும்கி யானைகளுடன் கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப் பினும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்து விடுகிறது. தொடர்ந்து யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.