கோவை, டிச.28- கோவையில் “செயல்” விவசாயிகள் வளர்ச்சி கருத்தரங்கம் நடைபெற்றது. கோவை ராம்நகரிலுள்ள கமலம் துரை சாமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு செயல் ஆலோசகர் டி.செல் வராஜ் தலைமை தாங்கினார். ஒருங்கி ணைப்பாளர் சதிஸ்குமார் வரவேற்புரை ஆற்றினார். இதில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே. சண்முகசுந்த ரம் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றி னர். முன்னதாக, செயல் அமைப்பின் செயல் பாடுகள் குறித்து திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனா பதி, வேளாண் பொருளியளர் முனைவர் ருத் துர பாலசுப்பிரமணியம் ஆகியோர் கருத் துரை ஆற்றினர். இந்நிகழ்வில் பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் மற்றும் விவசாய சங்க தலைவர்கள் கெளரவிக்கப்பட்டனர். இந் நிகழ்வில் சு.பழனிசாமி, எம்.ஈசன், டாக்டர் சி.தங்கராஜ், வி.ஆர்.பழனிசாமி உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகள் திரளானோர் பங் கேற்றனர்.