திருப்பூர், பிப்.11 - ஒன்றிய பாரதிய ஜனதா அரசு இந்த ஆண்டு பட்ஜெட்டில் நூறு நாள் வேலை திட் டத்திற்கான நிதியையும், விவசாயத்திற்கான பொது முதலீட்டையும் வெட்டிச் சுருக்கி யதைக் கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் பல் வேறு இடங்களில் ஒன்றிய அரசின் பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம் நடத்தினர். பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஒன்றிய பாஜக அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் விவசா யிகள், விவசாய தொழிலாளர்களுக்கு விரோ தமானதாக உள்ளது. இந்த பட்ஜெட்டை கண் டித்தும், விவசாயிகளின் உற்பத்தி பொருள்க ளுக்கு ஆதார விலை வழங்க மறுப்பு, உர மானியம் குறைப்பு, விவசாய தொழிலாளர்க ளுக்கு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தில் நிதி குறைப்பு மற்றும் உணவு மானி யத்தை இந்த பட்ஜெட்டில் வெட்டியதை கண் டித்தும் மாநிலம் தழுவிய பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் அகில இந்திய விவசா யிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட் டது.
ஊத்துக்குளி:
அதன்படி சனியன்று ஊத்துக்குளி ஆர்.எஸ். பேருந்து நிறுத்தம் அருகில் இப்போ ராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் ஆர்.சுப்பிரமணி தலைமை வகித்தார். தாலுக்கா செயலாளர் எஸ்.கே. கொளந்தசாமி, விவசாய தொழிலாளர்கள் சங்க தாலுகா தலைவர் ஆர்.மணியன், வாலி பர் சங்க ஒன்றிய செயலாளர் கு.பாலமுரளி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இதைத் தொடர்ந்து கண்டன முழக்கம் எழுப்பி ஒன்றிய அரசின் பட்ஜெட் நகல் எரிக் கப்பட்டது. இப்போராட்டத்தில் திரளான விவ சாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
பொங்கலூர்:
பொங்கலூர் ஒன்றியம் கொடுவாய் கிரா மத்தில் விவசாயிகள், விவசாய தொழிலாளர் கள் விரோத பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் விவசாயிகள், விவசாயத் தொழி லாளர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது. விவ சாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய செயலா ளர் ஜி.சுந்தரம் தலைமையில் ஒன்றிய தலை வர் எஸ்.சிவசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன் றிய செயலாளர் ஆர்.பாலன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தி னர். இதில் பெண்கள் உட்பட திரளாக கலந்து கொண்டனர்.
ஜல்லிபட்டி:
ஒன்றிய மோடி அரசின் விவசாயிகள் விவ சாயத் தொழிலாளர்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து உடுமலைப்பேட்டை ஒன்றியம் ஜல்லிபட்டி நால் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் ஏ.ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. 100 நாள் வேலைக்கு 23000 கோடி நிதியைக் குறைத்ததையும், உணவு மானியம் உர மானியம் உட்பட குறைத்ததை கண்டித்தும் கோரிக்கைகளை விளக்கி விவ சாயத் தொழிலாளர்கள் சங்க திருப்பூர் மாவட் டச் செயலாளர் ஏ.பஞ்சலிங்கம், ஒன்றிய செய லாளர் எம்.ரங்கராஜ், தலைவர் சி.முத்துசாமி, விவசாய சங்க உடுமலை செயலாளர் ஏ.பால தண்டபாணி, சிஐடியு செயலாளர் எஸ்.ஜெகதீ சன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடுமலை ஒன்றிய செயலாளர் கி.கனகராஜ் ஆகியோர் பேசினர். இதில் நிர்வாகிகள் குமரகுரு, மணி, தட்சிணாமூர்த்தி, மாணிக்கவாசகம், மற்றும் பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கமிட்டனர்.
குடிமங்கலம்:
விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் குடிமங்கலம் ஒன்றியக் கமிட்டிகள் சார்பில் பெதப்பம்பட்டி நால் ரோட் டில் பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம் நடை பெற்றது. விவசாயிகள் சங்க ஒன்றியத் தலை வர் எம்.சுந்தர்ராஜ் தலைமையில் நடை பெற்ற போராட்டத்தில் ஒன்றியத்தலைவர் ஏ. வலுப்பூரான், ஒன்றியச் செயலாளர் வி.தம்பு ராஜ், துணைத்தலைவர் எ.ஆறுமுகம், விவ சாயிகள் சங்க ஒன்றிய நிர்வாகிகள் கே.மகேந் திரன், நடராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.
அவிநாசி:
ல இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சனியன்று மாலை 3.30 மணியள வில் அவிநாசி அருகே போத்தம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஏ.சண்முகம் தலைமை வகித்தார். ஒன்றிய துணை செய லாளர் ஆர்.பழனிச்சாமி, விவசாயிகள் சங்க தாலுக்கா துணை செயலாளர் எஸ்.வேலுச் சாமி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். பின்பு கண்டன முழக்கம் எழுப்பி ஒன்றிய அர சின் பட்ஜெட் நகல் எரிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் விவசாயிகள் சங்க ஒன்றிய பொருளாளர் பி.குமாரசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் என்.கருப்புசாமி மற் றும் பலர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக, மடத் துக்குளம் தாலுகா கடத்தூரில் பணித்தளத் தில் தொழிலாளர்கள் மத்தியில் ஒன்றிய அர சின் பட்ஜெட் குறித்து உரையாற்றப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட தொழிலார்கள் கலந்துகொண்டனர். விவசாயத் தொழிலா ளர் சங்கத் தாலுகா செயலாளர் மாசாணம், துணை செயலாளர்கள் ஆறுமுகம், ராஜேஸ் வரி ஆகியோர் பங்கேற்றனர்.