உடுமலை ஜூன் 22- திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு முறையாக வராத சித்தமருத்துவரை கண்டித்து போராட்டம் நடத்தியதால், பொது மக்களின் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை வட் டம் குடிமங்கலம் ஒன்றியம் ராமச்சந்தி ரபுரம் சித்தா மருத்துவ பிரிவில் பணி யாற்றும் சித்தமருத்துவர் ஜோதி பிரபா அவர்கள் பணிக்குச் சரியாக வருவ தில்லை. மேலும் தனக்குக் கீழ் பணி புரி யும் மருத்துவ உதவியாளர்கள் மூலம் வருகைப்பதிவேடு பதிவு செய்து வருகிறார். இதனால் மருத்துவம னைக்கு வரும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதை அறிந்த ஊர் பொதுமக்கள் இதுபற்றி மருத்துவ உதவியாளரிடம் கேட்ட போது தனக்கு இது பற்றி எதுவும் தெரி யாது எனவும் மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளும்படியும் கூறி விட்டார் எனவே மருத்துவருக்கு இது தொடர்பாக கேட்டபோது நீ என்ன அமைச்சராக உனக்கு உனக்கு எதற்கு நான் பதில் சொல்ல வேண்டும் என்பன போன்ற முறையற்ற வார்த்தைகளில் பதிலளித்திருக்கிறார். இது குறித்து பொதுமக்கள் கூறிய தாவது, 21 ஆம் தேதி செவ்வாயன்று நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டோம். இதை அறிந்த மருத்து வர் குடிமங்கலம் காவல் நிலையம் சென்று பொய்யான புகார் அளித்து தன் தவறை மறைக்கும் முகமாகப் பிரச் சனையைத் திசை திருப்புகிறார். மேலும் இதுதொடர்பாக புத னன்று மருத்துவரிடம் முறையிடச் சென்ற போது மருத்துவமனையின் உள்ளே தனது அறைக் கதவை உள் பக்கமாக தாளிட்டுக் கொண்டு பொது மக்கள் மிரட்டும் விதமாகவும் அச்சு றுத்தும் விதமாகவும் காவல்து றைக்குத் தவறான தகவல்களைத் தந் துள்ளார். இதனால் மருத்துவம னைக்கு வந்த நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி திரும்பிச் சென்றனர் எனவே மருத்துவர் மீதும், மருத்துவ உதவி யாளர் மீதும் துறை ரீதியான விசா ரணை நடத்தித் தகுந்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் சார்பாக சித்த மருத்துவ இயக் குநருக்கு மனு கொடுத்ததாகக் கூறி னர்.