சேலம், ஆக.17- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி கொல்லப்பட் டதை கண்டித்து சேலம் வடக்கு மாநகர வாலிபர் சங்கம் சார் பில் போராடியாதற்காக 2018ஆம் ஆண்டு எடப்பாடி அரசின் தூண்டுதலில், அரசுக்கு எதிராக சதிதிட்டம் தீட்டுதல், பொது சொத்திற்கு சேதம் விளைவிக்க திட்டமிடுதல், அனுமதி இல் லாமல் கூட்டம் சேர்த்தல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் போன்ற பிரிவுகளில் பொய் வழக்கு பதிவு செய்து வாலிபர் சங்கத்தினர் 20 பேர் சேலம் மத்திய சிறை யில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு சேலம் ஜேஎம் 3 நீதிமன்றத்தில் 5 ஆண்டு கள் நடைபெற்றது. இந்நிலையில், வழக்கில் போதிய ஆதா ரம் இல்லையென கூறி அனைவரும் விடுவித்து தீர்ப்பு வழங் கப்பட்டன. இவ்வழக்கில் திறமையாக வாதாடிய வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளரும், அகில இந்திய வழக்கறி ஞர் சங்க மாவட்டச் செயலாளருமான வழக்கறிஞர் எம்.வெற்றி வேல் மற்றும் உதவியாளர் சரஸ்வதி ஆகியோருக்கு வாலி பர் சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.