districts

img

சரிந்து விழுந்த பாறை: போக்குவரத்து பாதிப்பு

உதகை, டிச.11- உதகையில் பெய்த கனமழை கார ணமாக ஆங்காங்கே மரங்கள் முறிந்து  விழுந்தது மட்டுமில்லாமல், பாறை களும் உருண்டு விழுகின்றன. இத னால் வாகன ஓட்டிகள் அச்சமடைந் துள்ளனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதி களில் கடந்த சில நாட்களாகவே பரவ லாக மழை பெய்து வருகிறது. இதன்  காரணமாக குன்னூர் மேட்டுப்பா ளையம் மலைப்பாதையில் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு அவ் வப்போது போக்குவரத்து பாதிக்கப் பட்டு வருகிறது. இந்த நிலையில்  திங்களன்று அதிகாலை கே.என்.ஆர் பகுதியில் மரம் சரிந்து சாலையில் விழுந் ததால் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து  குன்னூர் வனசரகர் ரவீந்திரன் தலைமையிலான குழு அந்த பகு திக்கு சென்று,  சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.  இது மட்டுமல் லாமல் தொடர்  மழை காரணமாக மலைப்பாதை யில் மண் சரிவு ஏற்படுவதுடன் மரங்க ளும் முறிந்து விழுகிறது.மேலும்  அவ்வப்போது பாறைகளும் உருண்டு  வருவதால் வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குன்னூர்-மேட் டுப்பாளையம் மலைப்பாதையில் 13-ஆவது கொண்டை ஊசி வளைவு  அருகே திடீரென மலைச்சரிவிலிருந்து பாறை ஒன்று உருண்டு வந்து  சாலையில் விழுந்தது. இதனைய டுத்து, குன்னூர் போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று கொண்டு சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் பாறையை நடுரோட்டில் இருந்து அகற்றி, போக்குவரத்தை சீர் செய்தனர்.