உதகை, மார்ச் 20- வெளி மாநிலங்களிலி ருந்து உதகைக்கு உருளைக் கிழங்கு வரத்து அதிகரித் துள்ளதால், உதகை உரு ளைக்கிழங்கு விலை சரிந் துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடி யாக மழை காய்கறி விவசா யம் செய்யப்படுகிறது. இங்கு உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், முள்ளங்கி, பீன்ஸ் உட்பட பல்வேறு வகையான மழை காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. குறிப் பாக உருளைக்கிழங்கு மற்றும் கேரட் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. பொதுவாகவே நீலகிரி மாவட்டத்தில் உற் பத்தி செய்யப்படும் மலை காய்கறிகளுக்கு விலை கூடுத லாக கிடைக்கும். அதுவும் உருளைக்கிழங்கிற்கு எப்போ துமே விலை அதிகமாக கிடைக்கும். சாதாரணமாக கடை களில் கிலோ ஒன்று ரூ.50 வரை விற்பனை செய்யப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இத னால், பெரும்பாலான விவசாயிகள் உருளைக்கிழங்கு பயி ரிட்டு வருகின்றனர். கடந்த வாரம் வரை நீலகிரி மாவட் டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு கிலோ ஒன் றிற்கு ரூ.50 வரை கிடைத்து வந்தது. இந்நிலையில், கோலார் மற்றும் குஜராத் ஆகிய பகுதிகளில் இருந்து தற்போது உரு ளைக்கிழங்கு அதிகளவு வர தொடங்கி உள்ளன. இந்த கிழங்கு ரூ.15 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இவைகள் தற்போது நீலகிரி மாவட்டத்திற்கும் அதிகளவு வர தொடங்கியுள்ளதால் நீலகிரி உற்பத்தி செய்யப்படும் உரு ளைக்கிழங்கு விலை சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த இரு நாட்க ளாக உதகை உருளைக்கிழங்கு கிலோ ஒன்று ரூ.20 முதல் ரூ.25 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதேசமயம் உருளைக்கிழங்கு கிலோ ஒன்று ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது கிலோ ஒன்று ரூ.15 முதல் கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.