districts

மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி

ஈரோடு, செப்.3- மரவள்ளி கிழங்கு டன்னுக்கு ரூ.3 ஆயிரம் வரை விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், விவ சாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட் டங்களில் பணப்பயிராக மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங் களாக மாவுப்பூச்சி தாக்குதலால் மரவள்ளி கிழங்கு உற்பத்தி, தரம், வரத்து குறைந்து விலை உயர்ந்தது. தற்போது மீண்டும் வரத்து அதிகரித்துள்ளதால் மரவள்ளி கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதுகுறித்து மரவள்ளி கிழங்கு விவசாயிகள் கூறுகையில், ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, மொடக்குறிச்சி, தாளவாடி ஆகிய தாலுகாக்களில் அதிகள வில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படு கிறது. கடந்த 3, 4 ஆண்டுகளாக மாவுப்பூச்சி  தாக்குதல் காரணமாக மரவள்ளி கிழங்கு உற் பத்தி குறைந்தது. இருப்பினும், ஈரோடு மாவட் டத்தில் சில இடங்களிலும், பிற மாவட்டங் களில் கருமந்துறை, கொல்லிமலை போன்ற  இடங்களிலும் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது மரவள்ளி கிழங்கு அறுவடை செய்யப்பட்டு வருவதால்  வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த வாரம் ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனை யான ஒரு டன் மரவள்ளி கிழங்கின் விலை  படிப்படியாக குறைந்து, தற்போது ரூ.12 ஆயி ரத்துக்கு விற்பனையாகிறது. அதாவது ஒரு வாரத்துக்குள் ரூ.3 ஆயிரம் வரை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும், ரூ.6 ஆயிரத்து 300க்கு விற்ப னையான 90 கிலோ எடை கொண்ட ஜவ்வரிசி மூட்டை, தற்போது ரூ.800 விலை குறைந்து ரூ.5 ஆயிரத்து 500க்கு விற்பனையாகிறது. ஸ்டார்ச் மாவு 90 கிலோ மூட்டை ரூ.5 ஆயிரத் தில் இருந்து ரூ.500 விலை குறைந்து, ரூ.4 ஆயிரத்து 500க்கு விற்கப்படுகிறது. எனினும் சாகுபடி பரப்பு குறைந்துள்ளதால், மரவள்ளி கிழங்குக்கான தேவை அதிகரிக்கும். எனவே, வரும் காலங்களில் மரவள்ளி கிழங்கின் விலை உயர வாய்ப்புள்ளது, என்றனர்.