districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

திருப்பூரில் போலி மருத்துவர் கைது

திருப்பூர், ஏப்.19 - திருப்பூரில் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை காவல் துறையி னர் கைது செய்தனர். திருப்பூர் கரட்டாங்காடு பகுதியில் முறையான அனுமதி  பெறாமல் மருத்துவமனை செயல்பட்டு வருவதாகவும், அங்கு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் வினீத்திற்கு புகார் வந்தது. இதைத் தொடர்ந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சுகாதாரப்  பணிகள் துறைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்  பேரில் சுகாதார பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் கனக ராணி தலைமையில் அதிகாரிகள் கரட்டாங்காடு பகுதியில் செயல்பட்டு வந்த (கிளினிக்) மருத்துவமனையில் ஆய்வு  செய்தனர். அப்போது கடந்த 2019ஆம் ஆண்டு வேறு ஒருவர்  பெயரில் பெற்ற உரிமத்தை கொண்டு அண்ணாதுரை என்ப வர் அங்கு பொது மக்களுக்குச் சிகிச்சை அளித்து வந்தது  தெரியவந்தது. மேலும்,  ஆயுர்வேத மருத்துவம் படித்து விட்டு, அலோபதி  மருத்துவம் பார்ப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து உரிய  அனுமதி இன்றி செயல்பட்ட மருத்துவமனைக்கு கடந்த 13 ஆம் தேதி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனை தொடர்ந்து  மருத்துவம் பார்த்து வந்த அண்ணாதுரையிடம் மாவட்ட  சுகாதாரப்பணிகள் அலுவலர்கள் விசாரணை மேற்கொ ண்டதில் அவர் ஆயுர்வேதம் பயிலாமல் மருத்துவம் பார்த்த தும், அவர் வைத்திருந்த சான்றுகள் அனைத்தும் தமிழ்நாடு  சித்த மருத்துவ கழகத்தில் பதிவு செய்ய இயலாது எனவும்  தெரியவந்தது. இதனை தொடர்ந்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில், போலி மருத்துவர் அண்ணாது ரையை திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்தனர்.

போக்சோ வழக்கில் இளைஞருக்கு  5 ஆண்டு சிறை

திருப்பூர், ஏப்.19- திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் வெள்ளிரவெளி பகுதி யைச் சேர்ந்தவர் கண்ணன் (30). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு 11  வயது பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தாக அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்  தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் கண்ணனை கைது செய்தனர். இது  தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதி மன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு செவ்வா யன்று கூறப்பட்டது. இதில் கண்ணன் மீது குற்றம் நிரூபிக்கப் பட்டு, அவருக்கு போக்சோ பிரிவில் 5 ஆண்டு கடுங்காவல்  சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி  பாலு தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர்  ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.

வீடு தேடி வந்து மாணவனை பள்ளிக்கு அழைத்து சென்ற ஆசிரியர்

கோவை, ஏப்.19- ஆனைமலை அருகே பள்ளிக்கு செல்ல மறுத்த மாண வனை, வீடு தேடி வந்து அழைத்து சென்ற ஆசிரியரால் அப் பகுதி கிராம மக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம், ஆனைமலையை அடுத்த பெத்த நாயக்கனூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை  சுமார் 200க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் கல்வி பயின்று வரு கின்றனர். தற்போது, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடை பெற்று வருவதால், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றனர். இப்பள்ளியில் 10 ஆம்  வகுப்பு படிக்கும் மாணவன் சஞ்சீவ் (15) பலமுறை அழைத் தும் பள்ளிக்கு வராமல், பல காரணங்களை கூறி ஏமாற்றி வந் துள்ளார். இதையறிந்த பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ராஜ சேகர் என்பவர், மாணவனை காண வீட்டிற்கு சென்று, பள்ளிக்கு  வராததுக்கான காரணத்தை கேட்டுள்ளார். அப்போது தனது  உறவினர் ஊரில் நடைபெறும் கோவில் திருவிழாவுக்கு செல்வதால், பள்ளிக்கு வரவில்லை என்று கூறியுள்ளார். இதை ஏற்க மறுத்த ஆசிரியர் பொதுத்தேர்வை வைத்து கொண்டு ஏன் பள்ளிக்கு வர மறுக்கிறாய்? என மாணவ னுக்கு அறிவுரை கூறி ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர் உதவியுடன் மாணவனை கல்வி பயில தனது இருசக்கர வாக னத்தில் பள்ளிக்கு அழைத்து சென்றார்.  இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் மாணவன் கல்வி கற்க பள்ளிக்கு வரவில்லை என்பதற்காக ஆசிரியர் ஒரு வர் மாணவனின் வீட்டிற்கு வந்து அறிவுரை கூறி, அழைத்து  சென்றது ஆசிரியர்கள் மீதான மரியாதை உயர்துவதாக பெரு மையாக பேசிக்கொண்டனர். இந்த பள்ளி அனைத்து வகை யிலும் சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின் காமராஜர் விருதை 2017 ஆம் ஆண்டு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

புளியம்பட்டி நகராட்சியில் ஆணையர் மீது தாக்குதல்

நகராட்சி அலுவலர்கள் அதிருப்தி

ஈரோடு, ஏப்.19- புன்செய் புளியம்பட்டி நகராட்சி வாரச்சந்தையில் இடம் ஒதுக்கீடு தொடர்பாக நடந்த சிறப்பு நகர மன்ற  கூட்டத்தில் ஆணையர் அவமதிக்கப் பட்டது குறித்து நகராட்சி அலுவலர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.  ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம் பட்டி நகராட்சியில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு மாட்டிறைச்சி விற்பனை கடைகள் நகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டது. இதனால் அங்கு கடை நடத்தி வந்த 13 அருந்ததியர் குடும்பத்தி னர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள் ளனர். இவர்களுக்கு ஆதரவாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற் றது.  இந்நிலையில், கடந்த 11 ஆம் தேதி  நடைபெற்ற குடியேறும் போராட்டத் தைத் தொடர்ந்து சிறப்பு நகர மன்ற கூட் டத்தை நடத்தி அதில் தீர்மானம் நிறை வேற்றுவது என கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் தலையிட்டு உறு தியளித்ததின் படி போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏப்.13 ஆம் தேதி நகரமன்ற கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் நகராட்சித் தலை வர் ஜனார்த்தனம் மற்றும் துணைத் தலைவர் பி.ஏ.சிதம்பரம் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்களும் நகராட்சி ஆணையர் அவர்களை முற்றுகையிட்டு கடுமை யான வார்த்தைகள் மூலம் விமர்சித்துள் ளனர். ஒருபடி மேலே சென்று நகராட்சி தலைவர், ஆணையர் அவர்களது நெஞ் சில் கை வைத்து தள்ளியுள்ளார் (தாக்கி யுள்ளார்).  இது அரசுப்பணியை செய்ய விடா மல் தடுக்கும் செயல் மட்டுமல்லாமல், குற்றச்செயலாகும். ஆகவே தற்போது தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வரும் மொத்த கவுன்சிலையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  ஈரோடு மாவட்டக்குழு வலியுறுத்தியுள் ளது. இதற்கிடையில் தமிழக வரலாற் றில் நகராட்சி ஆணையரை நகர்மன்ற தலைமை பொறுப்பில் இருப்போர் தாக் கிய சம்பவம் நடைபெறவில்லை. புன் செய் புளியம்பட்டியில் இது நடந்துள் ளது. இது ஜனநாயகத்திற்கு ஏற்புடைய தல்ல.  அரசு விதிகளுக்குப் புறம்பாக மக் கள் பிரதிநிதிகள் கொண்ட கவுன்சில் முடிவு எடுக்கும் போது அலுவலர்கள் அதனை சுட்டிக்காட்டுகிறார்கள். இத னால் மக்கள் பிரதிநிதிகள் கோபமடை கின்றனர். இது நகராட்சி விதிகளில் அவர் களது தேர்ச்சியின்மையால் ஏற்படுகி றது.  தமிழ்நாடு அரசு தலையிட்டு சம்பந் தப்பட்டவர்களை தகுதி நீக்கம் செய்ய  வேண்டும். ஆணையருக்கு பணிபுரியும் இடத்தில் உரிய பாதுகாப்பு வழங்க  வேண்டும் என நகராட்சி அலுவலர்கள் போராட்டத்திற்கு தயாராகி வருகின்ற னர்.

மரவள்ளிகிழங்கு விலை உயர்வு

நாமக்கல், ஏப்.19- நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மர வள்ளி கிழங்கு பயிரிடப்பட் டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று ஜவ்வரிசி மற்றும்  கிழங்கு மாவு தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுப்பி வரு கின்றனர். கடந்த வாரம் ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனை யான கிழங்கு, தற்போது ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனையா கிறது. அதேபோல் சிப்ஸ் தயா ரிக்கும் மரவள்ளிகிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.18 ஆயி ரத்திற்கு விற்பனையாகிறது.

ஆணவக்கொலைகளை தடுக்க பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு

சேலம், ஏப்.19- காவல் நிலையங்களில் தீர்வு காணாத புகார் மனுக்களின் மீது வாரந்தோறும் புதனன்று குறைதீர்க்கும் கூட்டம் நடை பெற்று வருகிறது. அதன்படி, சேலம் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் சிவகுமார் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரிடம் விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது சேலம் சரக காவல் துறை துணைத்தலைவர் ராஜேஸ்வரி கூட்டத்திற்கு வந்து ஆய்வு செய்தார். குறை தீர்க்கும் கூட்டத்தில் இருந்த மனுதாரர்களின் மனுக்களை வாங்கி விசாரணை மேற்கொண்டார். பின்னர் மனுக்களின் தன்மைக்கேற்ப விசாரணை நடத்தி உடனடியாக தீர்வு காண அந்தந்த பகுதி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் களுக்கும், ஆய்வாளர்களுக்கும் உத்தரவிட்டார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சேலம் சரகத்தில் இதுவரை 18 போலி மருத்துவர்கள் கைது  செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அனைத்து பகுதிகளிலும் போலி மருத்துவர்கள் குறித்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. காதல் திருமணத்தால் ஏற்ப டும் ஆணவக்கொலைகளை தடுக்க பள்ளி மற்றும் கல்லூரி களில் காவல் துறையினர், சமூக நலத்துறை மற்றும் பொது மக்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் மாணவ, மாணவிகளி டம் விழிப்புணர்வு நடத்த ஏற்பாடு செய்யப்படும், என்றார். 

ஏடிஎம் மையத்தில் பேட்டரி திருட்டு

கோவை, ஏப்.19- கோவை, கணபதி, கோபால் சாமி கோயில் தெருவில் தனி யார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டு வரு கிறது. இதனுள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒரு வர், ஏடிஎம் மையத்தின் அறையில் இருந்த ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான பேட்டரியை திருடி சென்றுள்ளார். இதனைய றிந்த வங்கி கிளை மேலாளர் சுப்பிரமணி. சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீ சார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி  கேமரா காட்சிகளை கைப்பற்றி திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.