சேலம், பிப்.8- எய்ட்ஸ் நோய் பரவாமல் இருக்க வும், அது குறித்த விழிப்புணர்வு ஏற்ப டுத்த தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட 186 நம்பிக்கை மையங்களை மூட அரசாணை வெளியிட்டுள்ளதை கண் டித்து நம்பிக்கை மையப் பணியாளர் கள் தபால் அனுப்பும் போராட்டத் தில் ஈடுபட்டனர். எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்பு ணர்வையும், எய்ட்ஸ் நோய் பாதித்த நோயாளிகளையும் பாதுகாக்கும் பணியில் நம்பிக்கை மையப் பணி யாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஒன்றிய அரசாங்கம் தமிழகத்தில் 186 நம்பிக்கை மையங் களை மூட அரசாணை அனுப்பியுள் ளது. இதனால் நம்பிக்கை மையப் பணிகள் செயல்படாத நிலை ஏற்பட் டுள்ளது. குறிப்பாக, இந்த அறிவிப் பால் நம்பிக்கை மையப் பணியாளர் கள் பணி பாதிக்கப்படுவதோடு, பொதுமக்களின் நலனும் பாதிக்கப் படும். எனவே, நம்பிக்கை மையத்தை தமிழ்நாட்டில் மூடாமல், தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். இதுகு றித்து ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் என தமிழ்நாடு முதல்வ ருக்கு, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப் பாடு அனைத்து ஊழியர்கள் நலச்சங் கத்தினர் தபால் அனுப்பும் போராட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தபால் அலு வலகத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெகஜோதி தலைமையில் தபால் அனுப்பும் போராட்டம் நடை பெற்றது. இதில் மாநிலப் பொருளா ளர் ரமேஷ், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.