உடுமலை, பிப்.9- இடிந்து விழும் நிலையில் உள்ள நியாய விலைக்கடையை சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத் துள்ளனர். உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டினத்தில் குரல் குட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் நியாய விலைக்கடை செயல்பட்டு வருகிறது. தனி கட்டிடத்தில் செயல் பட்டு வரும் இந்த கட்டிடத்தின் மேல் கூரை உடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும், இக்கூ ரையின் சிமென்ட் காரைகள் உதிர்ந்து கீழே விழுகின்றன. பொதுமக்கள் நியாய விலை கடையில் பொருட்களை வாங் கும் போது இடிந்து விழுந்து ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவ தற்குள் கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.