districts

img

சிஐடியு சார்பில் கண் பரிசோதனை முகாம்

பொள்ளாச்சி, ஆக.30- சிஐடியு கோவை மாவட்ட சாலை போக்குவரத்து சங்கம்,  இந்தியா விஷன் இன்ஸ்டிடியூட் மற்றும் பொள்ளாச்சி தனி யார் பேருந்து ஓட்டுநர், நடத் துநர் சங்கம் ஆகியவை இணைந்து ஓட்டுநர், நடத்துநர்  மற்றும் மெக்கானிக் உள்ளிட் டோருக்கு இலவச கண் பரி சோதனை மற்றும் கண்ணாடி  வழங்கும் நிகழ் பொள்ளாச்சி யில் நடைபெற்றது.  பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் ஆக.30,31 ஆகிய இரு நாட்கள் நடைபெற்ற நிகழ்விற்கு சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகி எம்.சத்யராஜ் தலைமை ஏற்றார். கண் பரிசோதனை முகாமை பொள்ளாச்சி நகர்மன்றத் தலை வர் சியாமளா நவநீதகிருஷ்ணன் துவக்கி  வைத்தார். இதில் திரளான போக்குவரத்து தொழிலாளர்கள் பங்கேற்று பயனடைந் தனர்.  முன்னதாக இந்நிகழ்வில், சிபிஎம் பொள்ளாச்சி தாலுகாச் செயலாளர் எம். அன்பரசன், அரசு போக்குவரத்து ஊழியர் கள் சங்க கோவை மண்டலச் செயலாளர் எம். பரமசிவம், விதொச மாவட்டப் பொருளாளர்  எம்.மகாலிங்கம், தென்னை விவசாயிகள் சங்கச் செயலாளர் ஸ்டாலின் பழனிசாமி உள் ளிட்டோர் வாழ்த்தி உரையாற்றினர். இதேபோன்று சூலூர் தாலுகாவிற்குட் பட்ட, செஞ்சேரி புத்தூர் பஞ்சாயத்து  அலு வலகத்தில் கா.செல்வகுமார் தலைமையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.  இதில், சிஐடியு சாலை போக்குவரத்து சங்க  பொதுச்செயலாளர் ஏ.எம்.ரபீக் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.