districts

img

பேருந்துகளில் கூடுதல் தூரத்தை காட்டி கூடுதல் கட்டணம்?

நாமக்கல், ஆக.4- பேருந்துகளில் கூடுதல் தூரத்தை காட்டி கூடுதல் கட்டணம் பெருவது தொடர்பான விவகாரத்தில், தூரத்தை அளக்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற் பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு  அருகே உள்ள சீத்தாராம்பாளையத்தில் வசிக் கும் கந்தசாமி மகன் கே.பாலசுப்ரமணியம் (49). இவர் அரசு பேருந்துகளில் கூடுதல் கட்ட ணம் வசூலிப்பதாக இரண்டு வழக்குகளை நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த இரண்டு வழக் குகளிலும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்ற நீதிபதி வீ.ராமராஜ் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. பாலசுப்ர மணியம் தாக்கல் செய்துள்ள முதலாவது வழக்கில், நான் திருச்செங்கோட்டில் இருந்து ஈரோட்டிற்கு கடந்த 2018 பிப்ரவரி மாதத்தில் அரசு பேருந்தில் சென்றேன். அப்போது திருச் செங்கோட்டில் இருந்து ஈரோட்டுக்கு 22 கிலோ மீட்டருக்கு பதிலாக 23 கிலோ மீட்டர் என கணக் கிட்டு ரூ.14 பயண கட்டணத்திற்கு பதிலாக ரூ.15 பயண கட்டணம் வசூலித்து விட்டனர் என தெரிவித்திருந்தார்.  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக  மேலாளர், சேலம் மேற்கு வட்டார போக்கு வரத்து அலுவலர் மற்றும் திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் மீது தாக் கல் செய்துள்ள இந்த வழக்கில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட ஒரு ரூபாயை திரும்ப தர  வேண்டும் என்றும் பொதுமக்களிடம் தொடர்ந்து இவ்வாறு கூடுதலாக பணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் இவ் வாறு வசூலித்ததற்காக ரூ.3 லட்சத்தை அபரா தம் விதிக்க வேண்டும் என புகாரில் பால சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் பேச்சுவார்த்தைக்கு சம ரசர்களாக நியமனம் செய்யப்பட்ட வழக்க றிஞர்கள் ஆர்.அய்யாவு, பி.குமரேசன், ஆகி யோர் வழக்கு தாக்கல் செய்தவரிடமும் சேலம் அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் உதவி மேலாளர் மற்றும் திருச்செங்கோடு வட் டார போக்குவரத்து அலுவலர் சேலம் மேற்கு மண்டல வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோரிடமும், அரசு வழக்கறிஞர் பி.சி. அர்ச்சனாவிடமும் பேச்சுவார்த்தை நடத்தி னர்.

இப்பேச்சுவார்த்தையின் இறுதியில், திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத் திலிருந்து ஈரோடு புதிய பேருந்து நிலையம் வரை ஈரோடு, திருச்செங்கோடு நெடுஞ் சாலைத்துறை கோட்ட பொறியாளர்கள் மற் றும் திருச்செங்கோடு நகராட்சி மற்றும் ஈரோடு மாநகராட்சி பொறியாளர்கள் மூலம் தூரத்தை அளவீடு செய்து அதன் அடிப்ப டையில், திருச்செங்கோடு வட்டாரப் போக்கு வரத்து அலுவலர் பயண கட்டணத்தை நிர்ண யம் செய்து, அரசு பேருந்து கட்டணம் வசூ லிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.   ஒப் பந்தத்தை, மூன்று மாத காலத்திற்குள் நிறை வேற்ற தவறினால் புகார்தாரருக்கு ரூ.ஒரு லட் சம் இழப்பீடு வழங்க அரசு தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது.  இதேபோல பாலசுப்ரமணியம் தாக்கல்  செய்துள்ள மற்றொரு வழக்கில் தாமும் தமது மனைவியும் கடந்த 2021 ஜூலை மாதத்தில் நாமக்கல்லில் இருந்து திருச்சிக்கு தமிழ்நாடு அரசு பேருந்தில் பயணம் செய்த போது சாதா ரண பேருந்துக்கான கட்டணத்தை ரூ.60 வசூ லிப்பதற்கு பதிலாக விரைவு பேருந்துக்கான கட்டணம் ரூ.77யை நடத்துனர் வசூலித்தார். இதனால் தாமும் மனைவியும் ரூ.34 கூடுத லாக செலுத்தி பயணிக்க நேரிட்டது. கூடுத லாக வசூலிக்கப்பட்ட தொகை ரூ.34 திரும்ப வழங்க வேண்டும் என்பதோடு பொதுமக்களி டம் இவ்வாறு கூடுதல் தொகை வசூலிப்ப தால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும் என  புகாரில் பாலசுப்பிரமணியம் தெரிவித்திருந் தார். இந்த வழக்கில் பேச்சுவார்த்தைக்கு சம ரசர்களாக நியமனம் செய்யப்பட்ட வழக்க றிஞர்கள் திருச்செங்கோடு எஸ்.பாலசுப்ர மணியம், பரமத்தி வி.கே.ராமலிங்கம் ஆகி யோர் வழக்கு தாக்கல் செய்தவரிடமும் சேலம் அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் உதவி மேலாளர் மற்றும் நாமக் கல் தெற்கு மண்டல வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அடுத்த சுற்று சமரசம் பேச்சுவார்த் தையாக செப்.15 ஆம் தேதிக்கு ஒத்தி வைக் கப்பட்டுள்ளது.