திருப்பூர், ஏப்.28- பின்னலாடை உற்பத்தியில் பல்வேறு நிலைகளான நிட்டிங், சாய ஆலை, பதப்படுத் துதல், எம்ப்ராய்டரி, பிரிண்டிங், தையல் உள் ளிட்ட செயல்பாடுகளுக்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எந்திரங்க ளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்ச னைகளை களைய, உள்நாட்டிலேயே பின்ன லாடை இயந்திர உதிரிபாகங்களை தயாரிக்க ஏற்றுமதியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியா ளர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம்.சுப்பிர மணியன் கூறுகையில், ரூ.34 ஆயிரத்து 350 கோடி பின்னலாடை ஏற்றுமதி, ரூ.30 ஆயிரம் கோடி அளவிலான உள்நாட்டு வர்த்தகம், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உட்பட அதி களவில் அந்நிய செலாவணியை ஈட்டித்த ரும் பெருநகரமாக திருப்பூர் உள்ளது. இருந் தாலும் கூட அதற்கான இயந்திரங்களை இறக் குமதி செய்யவேண்டிய நிலையிலேயே திருப்பூர் இருக்கிறது. பாதுகாப்புத்துறை மற்றும் சந்திராயன்-3 செயற்கைகோள் ஆகி யவற்றின் பங்களிப்பிற்காக இயந்திரங்க ளுக்கு தேவையான உபகரணங்கள் தயாரிப் பதற்காக, அரசு தேர்வு செய்த நகரம் கோவை ஆகும். பின்னலாடை தொழில் துறைக்கு தேவையான நிட்டிங், சாய ஆலை, பதப்ப டுத்துதல், பினிஷிங், எம்பிராய்டரி, பிரிண் டிங், தையல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு தேவையான அனைத்து வகையான இயந்தி ரங்கள் மற்றும் உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் இயந்திரங்க ளின் விலை உயர்வு, அதற்கான அதிக முத லீடு, இயந்திரங்கள் வந்து சேர்வதில் காலதா மதம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை நீக்கும் முயற்சியாக வும், முதல் கட்டமாக இயந்திரங்களின் உதிரி பாகங்களை உள்நாட்டிலேயே தயார் செய்ய கவனம் செலுத்துவதில் தொடங்கி அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல வேண் டும், என்றார். நிட்மா சங்கத்தின் தலைவர் அகில் எஸ். ரத்தினசாமி பேசுகையில், தொழில்துறை உள்நாட்டு வர்த்தகத்தில் இருந்து ஏற்றும திக்கு வளர்ச்சி அடைந்திருந்தாலும், இயந் திர உதிரி பாகங்கள் வாங்குவதிலும் அதற் கான செயல்பாடுகளும் நாம் வெளிநாட் டையே எதிர்நோக்கி இருக்கும் நிலை உள் ளது. இந்நிலை மாறி தொழிலை முன்னெ டுத்து செல்லும் முயற்சியாக ஏற்றுமதியா ளர்கள் சங்கத்தினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், என்றார்.