districts

img

சுரங்கப்பாதையை விரிவுப்படுத்துக

தருமபுரி, நவ.16- தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சுரங்கப் பாதையை விரிவுப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தி உள்ள னர். தருமபுரி அரசு கலை கல்லூரியின் பின்பகுதியில் ரயில்  தண்டவாளம் அமைந்துள்ளது. தருமபுரி - சேலம் வழித் தடத்தில் ரயில்கள் சென்று வருகின்றன. இந்த பகுதியில் பொதுமக்கள் ரயில் தண்டவாளத்தை கடப்பதற்காக சிறிய அளவில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் சென்று வரும் வகையில் உள்ள இந்த  சுரங்கப்பாதையை பட்டாளம்மன் கோவில், வெண்ணாம் பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதி களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் பயன் படுத்தி வருகின்றனர்.  இதேபோல் தருமபுரி மாவட்ட ஆட்சியர்அலுவலகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தருமபுரி, கிருஷ்ண கிரி பைபாஸ் சாலை, தடங்கம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வரு வோரும் இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்துகிறார்கள். தினமும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை 10 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தும் இந்த சுரங்கப் பாதையை விரிவுபடுத்தி கார்கள் மற்றும் வேன்கள் செல்லும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது.  இந்த சுரங்கப்பாதை விரிவுபடுத்தப்பட்டால் தருமபுரி ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கேட் பகுதியில் வாகன போக்குவரத்து கணிசமாக குறையும். இதனால் பல்வேறு பணிகளுக்கு செல்வோர், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கால தாமதத்தால் பாதிக்கப்படுவது தடுக் கப்படும்.  எனவே இந்த ரயில்வே சுரங்கப்பாதையை விரிவுபடுத்த உடனே நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.