கோவையில் பைக் மெக்கானிக் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (21). இவர் பீளமேடு வி.கே ரோட்டில் உள்ள பைக் மெக்கானிக் கடையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மணி மற்றும் அவருடன் வந்த மூன்று பேரும் ரவிக்குமாரிடம் கடை முதலாளி எங்கே? என்று கேட்டுள்ளனர். மேலும், அவரை போனில் அழைக்கும் படி தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ரவிக்குமார் தனது முதலாளிக்கு செல்போனில் அழைத்தார். தொடர்ந்து மணி அந்த போனை வாங்கிக் கொண்டு கடையில் இருந்து வெளியே செல்ல முயன்றார். தனது செல்போனை கொடுக்குமாறு ரவிக்குமார் கேட்கவே, மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ரவிக்குமாரின் தோள்பட்டை, இடது கை மற்றும் நெற்றியில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்
இதுகுறித்து ரவிக்குமர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள 4 பேரையும் தேடி வருகின்றனர்.