ஒவ்வொரு ஆண்டும் நவ.24 ஆம் தேதி படி வளர்ச்சி தினமாக கொண் டாடப்படுகிறது. படி வளர்ச்சி என்பது உயிரினங்களின் பரி ணாம வளர்ச்சியை குறிப்ப தாகும். 1859 ஆம் ஆண்டு நவ.24 ஆம் தேதி பரிணாம இயலின் தந்தையான சார்லஸ் டார்வின் “The Origin of Species” (உயிரினங்களின் தோற் றம்) என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்த புத்தகத்தின் வாயிலாக பரிணாம வளர்ச்சிக் கொள்கை உலகெங்கிலும் பரவி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. டார்வின், கால மாற்றத்திற்கு ஏற்ப உயிரினங்களும் படிப்படியான சில குறிப்பிட்ட மாற்றங்களை அடைகின் றன. மனித இனமும் இதன் அடிப்படையிலேயே உரு வாகி வந்திருக்கிறது என்றும் கூறினார். ஆப்ரிக்க குரங்கி னங்களோடு மனிதனை ஒப்பிட்டு ஆய்வு செய்த டார்வின், குரங்கினத்திலிருந்து பரிணாமம் அடைந்தது தான் மனித இனம் என்றும் ஆப்ரிக்கா தான் மனித இனம் உருவான இடம் என்றும் கூறினார். கொரில்லா, சிம்பன்சி, ஒராங்குட்டான் போன்ற குரங்கி னங்கள் மனிதர்களை ஒத்த உடல் தோற்றத்தையும், சில நடத்தைகளையும் கொண்டவை என ஆராய்ச்சிகள் நிரூபித் தன. அதன் அடிப்படையில் பேசிக்கொள்ளும் முறை, மண்டை ஓடு, தாடை மற்றும் பல் அமைப்பு, கரு வளர்ச்சி போன்றவற்றில் மனித இனத்திற்கும் குரங்கினத்திற்கும் நெருங்கிய தொடர்பிருப்பது தெரிய வந்தது. பரிணாம இய லின் தந்தையாக அறியப்படும் சார்லஸ் டார்வின் தனது கோட்பாடுகளால் உலக மக்களை வியப்பில் ஆழ்த்திய போதும் டார்வினின் கோட்பாடுகளுக்கு மறுப்பு தெரிவிப்ப வர்கள் இன்றைய காலகட்டத்திலும் இருக்கிறார்கள். டார்வினின் “The Origin of Species” (உயிரினங்க ளின் தோற்றம்) புத்தகம் வெளியான நாளை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 24 ஆம் தேதி படி வளர்ச்சி தினமாக அனுசரிக்கப்படுகிறது. -முத்துவீரனன்