திருப்பூர், நவ.29- பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் மக்க ளைப் பிரிக்கும் வெறுப்பு அரசியலைச் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக நாம் தொழிலாளி வர்க்கமாக ஒன்றுதிரண்டு போராட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் ஜி.சுகுமாறன் கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஸ்தாபனக் தலைவர்களில் ஒருவர் தோழர் என்.சங்கரய்யாவின் படத்திறப்பு நிகழ்ச்சி திருப்பூர் மாவட்டக்குழு அலுவல கத்தில் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் தலைமையில் புதனன்று நடைபெற் றது. இதில், தோழர் சங்கரய்யாவின் படத்தை திறந்து வைத்த மாநில செயற்குழு உறுப்பி னர் ஜி.சுகுமாரன் பேசுகையில், நாம் இப் போது கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்று வது போல் தோழர் சங்கரய்யா காலத்தில் பணியாற்ற முடியாது. அப்போது கம்யூ னிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது. பத் திரிகைகள்தான் சங்கரய்யாவை கம்யூ னிஸ்ட் ஆக மாற்றியது. தமிழ்நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்படும் சிங்கார வேலர் விடுதலையில் எழுதும் கட்டுரைக ளைப் படித்ததுத்தான் இடதுசாரி சிந்தனை கள் ஓட்டத்திற்கு அவரைத் தள்ளியது. 19 வயது முதல் கம்யூனிஸ்ட் கட்சியில் பணி யாற்றினார். சங்கரய்யாவின் வாழ்க்கையிலி ருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளமாக இருக்கிறது. பகத்சிங் தூக்கில் இடப்பட்டதற்கு எதிராக இந்தியா முழுவ தும் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சங்கரய்யாவும் போராட்டம் நடத்தினார். அப்போது கல்லூரி நிர்வாகம் சங்கரய்யாவை அழைத்து நீங்கள் டிசி வாங் கிக்கொண்டு சென்று விடுங்கள். இல்லை யென்றால் உங்களை நாங்களே வெளியே அனுப்பி விடுவோம் உங்களால் எங்கேயும் சென்று படிக்க முடியாது என்று மிரட்டினர். அன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவ தும் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் செயல் பட முடியாததால், காங்கிரஸ் கட்சியில் காங் கிரஸ் சோசியலிஸ்ட் என்ற ஒரு அமைப்பைத் தொடங்கி அன்றைய கம்யூனிஸ்ட் தலைவர் கள் ஏகே.கோபாலன், ஜானகி அம்மாள் உள் ளிட்ட தலைவர்கள் பணியாற்றி வந்தனர். அவர்கள் தோழர் சங்கரய்யாவை அழைத்து மாணவர் சங்கத்தில் செயல்படுங்கள் என்று சொல்லியதன் அடிப்படையில் அவர் தமிழ கத்தின் முதல் மாணவர் சங்க செயலாளராக பணியாற்றினார். அப்போதுதான் சுப்பிரமணி யசர்மா என்ற கம்யூனிஸ்ட் தலைவரின் ஆலோ சனைப்படி கல்லூரிக்குச் சென்று நான் டிசி வாங்கி செல்ல முடியாது. நீங்கள் டிசி கொடுத்தால் மாணவர்களைத் திரட்டி போரா டுவேன் என்று தெரிவித்ததையடுத்து கல்லூரி நிர்வாகம் அவரை படிக்க விடுகிறார்கள். அதற்குப் பின்புதான் சங்கரய்யா கைது செய்யப்படுவதெல்லாம் நடைபெற்றது.
இத் தனை இடர்பாடுகளுக்கும் இடையில் தோழர் சங்கரய்யா கம்யூனிச இயக்கத்தில் பணியாற் றியதற்கான காரணம், இந்த ஒடுக்குமுறை சமூகமான முதலாளித்துவத்தைத் தூக்கி எறிந்து, அனைத்து மக்களையும் சமமாக மாற் றக்கூடிய சோசலிச சமுகத்தைப் படைக்க வேண்டும் என்ற லட்சியத்தால் தான். ஆனால் இந்த காலகட்டத்தில் விரும்பத் தகாத சக்திகள் ஆட்சிக்கு வந்துள்ளனர். நாடு சுதந்திரம் அடைந்தது முதலே, மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்து வருகிறது. அனைத்து மதத்தினரும் அவரவர்கள் மதத்தை பின்பற்றி ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் அவர்கள் மக்களைப் பிரிக்கும் வெறுப்பு அரசியலைச் செய்து வருகிறார்கள். இப்படி வெறுப்புணர்வைத் தூண்டுவதன் மூலம் ஆதாயம் அடைந்து வருகிறார்கள். இந்த வேற்றுமையை ஊட்டுவதற்கான கார ணம், முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக தொழிலாளி வர்க்கமாக அனைத்து மக்களும் ஒன்று திரண்டு விடக்கூடாது என்பதால்தான். மக்களை ஜாதிரீதியாக, மதரீதியாக பிரிக்கி றார்கள். இவர்களுக்கு எதிராக நாம் தொழி லாளி வர்க்கமாக ஒன்று திரண்டு போராட வேண்டும் என்றார். இந்நிகழ்வில், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.ராஜகோபால் உட்பட கட்சி நிர்வாகி கள் பலர் பங்கேற்றனர்.