நாமக்கல், மார்ச் 24- அதிமுகவினரே தங்களது வேட் பாளரை நம்பாத நிலை தற்போது உள்ளதென, ஈரோடு மக்களவை தொகுதியின் திமுக வேட்பாளர் பிர காஷ் சாடியுள்ளார். ஈரோடு மக்களவை தொகுதிக் குட்பட்ட பள்ளிபாளையம், குமார பாளையம் மற்றும் பல்லக்காபாளை யம் ஆகிய மூன்று இடங்களில், இந் தியா கூட்டணியின் தேர்தல் பணி மனை திறப்பு விழா நடைபெற்றது. வனத்துறை அமைச்சர் மா.மதி வேந்தன், திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் மதுரா செந்தில் ஆகி யோர் பணிமனையை திறந்து வைத்த னர். அப்போது அமைச்சர் மா.மதி வேந்தன், இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைக்க அனைத்து கூட்டணி கட்சியினரும் கடுமையாக உழைக்க வேண்டும். மத்தியில் மோடி ஆட்சியை அகற்ற தீவிரமாக தேர்தல் பணியாற்ற வேண்டும், என் றார். இதைத்தொடர்ந்து திமுக வேட்பாளர் பிரகாஷ் செய்தியாளர்க ளிடம் பேசுகையில், ஈரோடு மக்க ளவை தொகுதியில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் ஆர் எஸ்எஸ், பாஜக பின்னணி உள்ள நபர் ஆவார். இதிலிருந்து அதிமுக வும், பாஜகவும் மறைமுக கூட்டணி யில் உள்ளதை நாம் தெரிந்து கொள் ளலாம். அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ஆற்றல் அசோக்கு மாரின் தாயார் மற்றும் மாமியார் ஆகி யோர் பாஜக, ஆர்எஸ்எஸ்-ல் உள்ள னர். அப்படிப்பட்ட ஆற்றல் அசோக் குமார் திராவிட இயக்க அரசியலில் அதிமுகவின் வேட்பாளராக போட் டியிடுவது முரண்பாட்டின் மொத்த உருவமாக உள்ளது. அதிமுகவி னரே தங்களது வேட்பாளரை நம்பாத நிலையே உள்ளது. பள்ளிபாளையம், குமாரபாளை யம், கரூர், நாமக்கல் உள்ளிட்ட இடங் கள் ஜவுளி தொழில் நிறைந்த பகுதி களாகும். அப்படிப்பட்ட ஜவுளி தொழிலை பாதுகாக்க வேண்டிய நிலைக்கு நாம் இப்போது தள்ளப்பட் டுள்ளோம். ஏனெனில், கடந்த 10 ஆண்டுகளில் ஜவுளி தொழிலையே மோடி அரசு அழித்துவிட்டதென அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், பள்ளிபாளையம் நகராட்சி பகுதி யில் போதிய அளவு பரப்பளவு இடம் இல்லாததால் அரசு திட்டங்களை கொண்டுவர முடியாத நிலை உள் ளது. அரசு அலுவலகங்கள் உள் ளிட்ட பொதுமக்கள் பயன்பாட்டிற் கான இடம் இல்லாத நிலை இருப் பதால், பள்ளிபாளையம் நகராட்சி எல்லை விரிவாக்கம் செய்ய வேண் டிய தேவை உள்ளதால் அதற்கு ஏற்ற வகையில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். கடந்த 20 ஆண் டுகளாக சட்டமன்ற உறுப்பினராக உள்ள தங்கமணி, நகராட்சியை விரி வாக்கம் செய்வதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஈரோடு நாடாளுமன்ற தொகுதி யில் திமுக வெற்றி பெற்றால், முதற் கட்டமாக நகராட்சி எல்லை விரி வாக்கம் செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் செய்யப்படும், என உறுதியளித்தார்.