districts

img

ஈரோடு மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, டிச.21- பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி ஈரோடு மாகராட்சியில் பணிபு ரியும் தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாநகராட்சியில் பொது சுகாதாரப் பிரிவில் பணியாற்றும் தூய் மைப் பணியாளர்களுக்கு குறைந் தபட்ச கூலி சட்டப்படி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி சிஐடியு உள் ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு சார் பில் டிச.29 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 15 நாட்களுக்கு முன்பே தொழிற்சங்கங்க கூட்டமைப்பினர் மாநகராட்சி நிர்வாகத்திடம் அறி விக்கை கொடுத்துள்ளனர். இந்நிலை யில், மண்டல வாரியாக தொழிலாளர் களைத் திரட்டி தொழிற்சங்க கூட்ட மைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வரு கின்றனர். அந்தவகையில் சூரியம் பாளையத்தில் தூய்மைப் பணியா ளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதில் சிஐடியு தலைவர் எஸ்.சுப்ர மணியன், ஏஐடியுசி தலைவர் சின்ன சாமி உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகி கள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.