ஈரோடு, ஏப். 8- ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன் றியத்திற்குட்பட்ட முருங் கத்தொழுவு ஊராட்சியின் கே.ஜி.வலசு (கந்தப்பக் கவுண்டன் வலசு) பகுதியில் புதிய சித்தா நலவாழ்வு மையம் திறக்கப்பட்டது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியம், செய்தித்துறைஅமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ண னுண்ணி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோ பதிவுத்துறை இயக்குநர் கணேஷ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் ஆகியோர் புதிய சித்தா நலவாழ்வு மையத்தினை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிர மணியன் பேசும்போது, மாநில நிதியில் செயல்படும் சித்த மருத்துவ பிரிவும் ஒன்றிய அரசின் பங்களிப்புடன் ஏற்படுத்தப்பட்ட நலவாழ்வு மையமும் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வந்தால், அவை மக்களின் தேவைக்கேற்ப மற்ற மருத்துவ நிலையங் களுக்கு மாற்றி அமைக்கப்படும், என்று நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பெருந்துறை அரசு தாலுகா மருத்துமனையில் செயல்பட்டு வந்த சித்த மருத்துவ பிரிவு வேறு இடத்திற்கு மாற்றி அமைக்கும் வகையில் ஆண்டிற்கு ரூ.6.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசு ஆரம்ப சுகதாதார நிலையம் கந்தப்ப கவுண்டன் வலசு பகுதியில் துவங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப் பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.