உடுமலை, ஜன.15- திருப்பூர் மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதேபோல், உடுமலை அருகே பாரம்பரிய முறை யில் மலைவாழ் மக்கள் பொங்கல் விழாவினை கொண்டாடினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங் கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கம் இணைந்து காங்கயத்தில் தமிழர் திருநாளை சமத்துவ பொங்கல் விழாவாக, மக் கள் ஒற்றுமைத் திருவிழாவாக கொண்டாடினர். தமிழரின் பாரம்பரிய இயற்கை வாழ்வியல் முழக்கத்தைப் பதியமிட்டு, ஐம்பெரும் பொருட்க ளைப் போற்றி, உழைப்போரையும் உழவர்களையும் போற்றி, கும்மி கொட்டி, காங்கயம் அருணாசல உடை யார் தோட்டத்தில் இவ்விழா கொண் டாடப்பட்டது. இதில் காங்கயம் பகுதி யின் உழவர்கள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பள்ளி மாணவர்கள், வாலிபர்கள், மற்றும் சமூக முன்னணியினர்கள் கலந்து கொண்டு சமத்துவப் பொங்கலை சிறப் பித்தனர். உடுமலை தாலுகா, குரல்குட்டை, மாவீரன் பகத்சிங் செந்திடலில் வாலி பர் சங்கத்தின் முன்னாள் தாலுகா செயலாளர் கனகராஜ் தலைமையில் மக்கள் ஒற்றுமைப் பொங்கல் வைக் கப்பட்டு அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏரா ளமான பொதுமக்கள் கலந்து கொண்ட னர். அவிநாசியை அடுத்த பெருமாநல் லூர் அருகே உள்ள அன்னையர் முதி யோர் இல்லத்தில், பொங்கல் திரு நாளன்று முதியோர்களுக்கு சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் புத்தாடை வழங்கினர். மலைவாழ் மக்கள் உடுமலை, ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு வனச்சரகங்க ளில் மலைவாழ் மக்கள் வசித்து வரு கின்றனர். உடுமலை வனப்பகுதியில், மாவடப்பு மலைவாழ் மக்கள் குடியி ருப்பில் 150க்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசித்து வருகின்றன. இந்நிலை யில், இயற்கைக்கு நன்றி கூறும் திரு விழாவான, பொங்கல் திருநாள் மாவ டப்பு மலைவாழ் மக்கள் குடியிருப்பில் பாரம்பரிய முறைப்படி கொண்டாடப் பட்டது. இங்கு வசிக்கும் மக்கள் அனை வரும் இணைந்து, ஊர் பொது இடத் தில் பொங்கல் வைத்தனர். மேலும், பாரம்பரிய நடனம் ஆடியும், இசைக் கருவிகள் இசைத்தும் கொண்டாடி னர். இதைத்தொடர்ந்து, அனைவரும் அமர்ந்து பொங்கல் உண்டு மகிழ்ச்சி யடைந்தனர். மேலும் மாடுகள் அதிக ளவு வளர்த்து வரும் குழிப்பட்டி உள் ளிட்ட மலைவாழ் மக்கள் குடியிருப் பில், பொங்கல் கொண்டாடப்பட்டது.