districts

img

கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பெண்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி

சேலம், நவ.28- கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு, தனியார் தொண்டு நிறுவனம் மூலம் தொழில் துவங்க பயிற்சி அளிக்கப்பட்டது. சேலம் மாவட்டம், தாரமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் கொத்தடிமைகளாக இருந்து அரசின் ஒத்துழைப்புடன் மீட்கப் பட்ட பெண்களுக்கு கயிறு தயாரிக்கும் தொழில் சார்ந்த பயிற்சி சேலத்தில் அளிக் கப்பட்டது. மேலும், அரசு வழங்கக்கூடிய வீட் டுமனை மற்றும் சலுகைகள் குறித்து வழக் கறிஞர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் தொண்டு நிறுவன இயக்குநர் அலமேலு பேசுகையில், சேலம் மாவட்டத்தில் எண்ணற்ற பெண்கள் கொத்தடிமைகளாக பல நிறுவனங்களில் இருந்துள்ளனர். அவர்களை அரசின் உதவி யுடன் மீட்கப்பட்டு, தற்போது தொழில் முனை வோராக மாற்ற முயற்சி எடுக்கப்பட்டுள் ளது. தற்போது 100க்கும் மேற்பட்ட பெண்க ளுக்கு கயிறு தயாரிக்கும் தொழிலை பயிற்று வித்து, அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட உதவி புரிவதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்ச் சியில் வழக்கறிஞர் திவ்யா, மாதர் சங்க மாவட்ட நிர்வாகி ஜி.கவிதா உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர்.