districts

img

பெண்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி

சேலம், அக்.11- சேலத்தில் நடைபெற்ற பெண்களுக்கான தொழில் முனை வோர் பயிற்சி முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு,  பயனடைந்தனர். சேலம், ஶ்ரீசாரதா மகளிர் கல்லூரியில் இயங்கிவரும் பெண்கள் சமூக இணைப்பு மையம், ஐஐசி மற்றும் இந்திய  அரசின் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தோடு இணைந்து பாரம்பரிய இந்திய கலை வடிவத்தைக் கற்றுக் கொள்ளவும், பெண்களின் படைப்பாற்றல் மற்றும் வடிவ மைப்புத் திறன்களை மேம்படுத்தவும் பல்வேறு வகையான பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. அதன்ஒருபகுதியாக, ஆரி மற்றும் எம்பிராய்டரி ஒர்க் கற்றுக் கொள்வதற்கான பயிற்சி  கடந்த அக்.9 ஆம் தேதியன்று துவங்கியது. இம்முகாம் அக்.13 ஆம் தேதி (நாளை) வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்வில், ஶ்ரீசாரதா மகளிர் கல்லூரியின் முதல்வர் ரா.உமாராணி, ஒருங் கிணைப்பாளர்கள் நா.உமாமகேஸ்வரி, ஜெ.மெர்லின் சிந்தியா, ஐஐசியின் துணைத்தலைவர் ஜெ.சத்யா, காதி  மற்றும் கிராமத் தொழில் முனைவோர் குமாரி மோகனசந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.