districts

img

மோடியின் ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் தொழில்துறை ஏற்றுமதி தொடர் சரிவால் திணறும் தொழில்முனைவோர்

பஞ்சு விலை உயர்வால் ஆலை உரிமையாளர்கள் மட்டுமல்லாது, விசைத்தறியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். கழிவுப் பஞ்சின் விலையும் உயர்ந்திருப்பதால் அவற்றை மூலப்பொருளாகக் கொண்டு கலர் நூல்களை தயாரிக்கும் ஓபன் எண்ட் மில்களும், அவர்களிடம் இருந்து நூலைப் பெறும் விசைத்தறியாளர்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கோவை மாவட்டத்தில் விசைத்தறி தொழில் குறைந்து வருகிறது. கருமத்தம்பட்டி, சோமனூர், அன்னூர் சுற்றுவட்டாரங்களில் விசைத்தறிகள் உடைக்கப்பட்டு பழைய இரும்புக்காக எடுத்துச் செல்லப்படுவது அதிகரித்து வருகிறது. ஜவுளித்துறை செழிப்பான வளர்ச்சி பெற்றிருப்பதாக கோவையில் பிரதமர் மோடி வாயால் வடை சுட்டுக்கொண்டிருக்கும்போது, கருமத்தம்பட்டியில் இருந்து ஒரு விசைத்தறிக்கூடம் உடைக்கப்பட்டு பழைய இரும்புக்கடைக்கு சென்று கொண்டிருந்தது.

ஒன்றிய அரசின் தவறான ஜவுளிக் கொள்கை களாலும், அதிகப்படியான மூலதனச் செலவு, ஏற்றுமதி கட்டணத் தடைகள், அதிகப்படியான செலவினங்கள் போன்றவற்றாலும் பணமதிப்பி ழப்பு, ஜிஎஸ்டி, பொருளாதார மந்தநிலை போன்ற வற்றாலும் இந்திய ஜவுளித் தொழில் கடுமை யான சிக்கலை சந்தித்து வருகிறது. பருத்திதான் இங்குள்ள பஞ்சாலைகளுக்கு மூலப்பொருள் என்றாலும் அவற்றை வெளி மாநிலங்களில் இருந்தே இறக்குமதி செய்ய வேண் டிய நிலை உள்ளது. பருத்தி சீசன் அல்லாத ஏப்ரல், அக்டோபர் காலகட்டங்களில் ஆலைக்குத் தேவையான பருத்தியை வர்த்தகர்களிடம் இருந் தும் இறக்குமதி மூலமாகவும்தான் பஞ்சாலைகள் பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய நிலை உள் ளது. அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் இருந்து பருத்தி நீக்கப்பட்டதால் ஊக வணிகம் காரணமாக பருத்தியின் விலை நிலையற்றதாக வும், தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

 கடந்த 2016 ஆம் ஆண்டில் ஒரு கேண்டி பஞ்சு சுமார் ரூ.33 ஆயிரமாக இருந்தது. ஆனால் தற் போது அது ரூ.61 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. பருத்தி விலை உயர்வால் நூல் விலை அதிக ரிக்கிறது. ஆனால் அதிக விலைக்கு நூலை வாங்கி ஆடைகள் தயாரிக்க உற்பத்தியாளர்கள் நஷ்டமடைய தயாரில்லை. மேலும், ஏற்றுமதி ஆடைகள் தயாரிப்புக்கான நீண்ட இழை பருத் தியை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் இறக்குமதிக்கு ஒன் றிய அரசு 11 சதவீத இறக்குமதி விதித்துள்ளது. ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு, சர்வதேச மந்தநிலை, வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து இறக்கு மதி போன்ற நடவடிக்கைகளால் ஜவுளித் தொழில் தள்ளாட்டத்தில் இருக்கிறது. கடந்த 2022 - 23 ஆம் நிதியாண்டில் ரூ.1.29 லட்சம் கோடியாக இருந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி 2023-24 இல் கடந்த பிப்ரவரி மாதம் வரையிலும் ரூ.1.08 லட்சம் கோடியாகவே இருந்தது.

கடந்த நிதியாண்டில் மாதம்தோறும் ஏற்றுமதி சரிவை சந்தித்து வந்திருப்பதுடன் ஒட்டுமொத்தமாக 9.9 சதவீத சரிவை அடைந்திருப்பதாக ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கோவை, திருப்பூர் பகுதிகளில் உற்பத்தியா கும் ஆயத்த ஆடைகள் முக்கியமாக அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், ஜெர் மனி, சவூதி அரேபியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.  இதில் முந்தைய நிதியாண்டுடன் (2022 - 23)  ஒப்பிடும்போது கடந்த நிதியாண்டில் (2023 - 24) அதிகபட்சமாக ஜெர்மனிக்கான ஆடை ஏற்றுமதி 24.6 சதவீதம் சரிவடைந்திருக்கிறது. அமெரிக்கா வுக்கான ஏற்றுமதி 16.7 சதவீதமும், இத்தாலிக் கான ஏற்றுமதி 16 சதவீதமும், பிரிட்டனுக்கான ஏற்று மதி 12.7 சதவீதமும், ஸ்பெயின், ஐக்கிய அரபு  அமீரகம், பிரான்ஸ் நாடுகளுக்கான ஏற்றுமதி  முறையே 9.5, 8.9, 7.3 சதவீதமும் சரிவடைந்திருக் கிறது. அதேபோல் ஜப்பான், கொரியா போன்ற அயல் நாட்டு வணிக ஒப்பந்தம் (எப்.டி.ஏ.) மேற்கொண்டி ருக்கக் கூடிய நாடுகளுக்கும் ஏற்றுமதி முறையே 9.9 சதவீதம், 9.6 சதவீதம் என சரிவையே சந்தித் திருப்பதாக ஜவுளி ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், இந்தியாவின் ஜவுளி உற்பத்தி மட்டு மின்றி பல்வேறு பொருள்களின் ஏற்றுமதியும், ஒட்டு மொத்த ஏற்றுமதி சதவீதமும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சரிவை சந்தித்திருப்பது புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது. அதன்படி அரிசி ஏற்றுமதி கடந்த 2022-23 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 2023-24 ஆம்  நிதியாண்டில் 4.03 சதவீதம் சரிவடைந்திருக்கி றது. மற்ற தானியங்களின் உற்பத்தி முன் எப் போதும் இல்லாத அளவுக்கு 54.75 சதவீதம் சரிவ டைந்திருக்கிறது.

முந்தைய நிதியாண்டில் ரூ.8,928 கோடியாக இருந்த தானியங்களின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் ரூ.4,039 கோடியாக சரிந்துள் ளது. அதேபோல் முந்திரி ஏற்றுமதி 1.17 சதவீத மும், கடல்சார் பொருள்களின் ஏற்றுமதி 4.49 சதவீத மும், மைக்கா, நிலக்கரி உள்ளிட்ட தனிமங்கள்,  கனிமங்களின் ஏற்றுமதி 7.21 சதவீதமும் சரிவ டைந்திருக்கிறது. தோல் பொருள்களின் ஏற்றுமதி 7.64 சதவீதமும், ரத்தினங்கள் மற்றும் அணிகலன் களின் 11.62 சதவீதமும், கரிம வேதிப்பொருள்கள், இதர வேதிப்பொருள்களின் ஏற்றுமதி 4.27 சதவீத மும், அனைத்து வகையான சணல் பொருட்களின் ஏற்றுமதி 19.81 சதவீதமும், பெட்ரோலிய பொருட் களின் ஏற்றுமதி 9.06 சதவீதமும், பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் தரை விரிப்புகளின் ஏற்று மதி 1.28 சதவீதமும் சரிவடைந்திருக்கிறது. இந்திய தொழிற்துறையை நாசம் செய்த மோடி  அரசை விரட்ட வேண்டும் என்கிற கருத்து தொழி லாளர்கள் மத்தியில் இருந்து, அடுத்த கட்டமாக தொழில்துறையினரிடம் சென்றுவிட்டது. எவ் வளவுதான் வலிக்காதது போல நடிப்பது, மௌனப் புரட்சி செய்ய தொழில்துறையினர் உறுதியேற் றுள்ளனர். அதிகாரத்தில் மோடி அரசு உள்ளதால் அடக்கி வாசிக்கிறோம், ஏப்ரல் 19இல் ஒற்றை விர லால் பாடம் கற்பிப்போம் என்கின்றனர் தொழில் துறையினர். -அ.ர.பாபு