districts

img

சைக்கிள் பிரச்சார பயணம்: சேலத்தில் வாலிபர் சங்கத்தினருக்கு உற்சாக வரவேற்பு

சேலம், ஏப்.29- இளைஞர்களுக்கு வேலை கொடு என்ற முழக்கத்தோடு வாலி பர் சங்கத்தினர் மேற்கொண்டு வரும் சைக்கிள் பிரச்சார பயணக் குழுவிற்கு சேலத்தில் உற்சாக வர வேற்பளிக்கப்பட்டது. இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும். ஒன்றிய, மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும். உழைப்பை சுரண்டும் தற்காலிக ஒப்பந்த அவுட்சோர்சிங் திட்ட அடிப்படை யில் நியமனத்தை தடை செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினர், சென்னை கன்னி யாகுமரி, கோவை, புதுச்சேரி ஆகிய தமிழகத்தின் நான்கு முனைகளில் இருந்து 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு சைக் கிள் பயணத்தை மேற்கொண்டுள் ளனர். ஏப்.21 ஆம் தேதியன்று கோவையில் வாலிபர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பால சந்திரபோஸ் தலைமையில் துவங் கிய சைக்கிள் பிரச்சார பயணக் குழுவிற்கு சேலம் மாவட்டம் தார மங்கலம், கொல்லப்பட்டி, அரி யாக்கவுண்டம்பட்டி, தாதகாப் பட்டி, சேலம் ஜங்சன், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய பகு திகளில் உற்சாக வரவேற்பு அளிக் கப்பட்டது. இதேபோல், காப்பீட்டு கழக ஊழியர் சங்க சேலம் கோட்டம் சார்பில் குரங்குச்சாவடி பகுதி யில் உற்சாக வரவேற்பு அளிக் கப்பட்டது. இதன்பின் பயணக் குழுவினர் அனைவருக்கும் நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தனர். இதில், காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் கோட்ட செயலாளர் ஆர்.நரசிம்மன், கலி யபெருமாள் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர். சைக்கிள் பிரச்சாரக் குழுவில் வாலிபர் சங்க மாநில துணைச்செயலாளர் கே.எஸ்.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பி னர்கள் பாரதி, ஜீவா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற னர்

மார்க்ஸ், ஜீவா சிலைகளுக்கு மரியாதை

முன்னதாக, சேலம் சிறை தியா கிகள் நினைவகத்தில் உள்ள காரல் மார்க்ஸ் சிலைக்கு வாலி பர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பாலச்சந்திர போஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல், அம்மாபாளையம் பகுதியில் ஜீவானந்தம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து 4 ரோடு பகு தியில் சிபிஎம் வடக்கு மாநகரக் குழு சார்பில் 100 அடி நீள பேனர் வைத்தும், மலர்தூவியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட் டது. இதன்பின் காசக்காரனூர் பகுதியில் வாலிபர் சங்க மேற்கு மாநகர தலைவர் கண்ணதாசன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில், சிபிஎம் மாவட்ட செயலாளர் மேவை.சண் முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.குணசேகரன், பி.ராமமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.சேதுமாத வன், டி.பரமேஸ்வரி, பி.சந்திரன், பி.பாலகிருஷ்ணன், ஆர்.வைர மணி, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கந்தசாமி, மாவட்ட செய லாளர் வெங்கடேஷ், முன்னாள் செயலாளர் என்.பிரவீன்குமார், வடக்கு மாநகர செயலாளர் குரு பிரசன்னா, தலைவர் சதீஸ்குமார், மேற்கு மாநகர செயலாளர் பி.ஜெகநாதன், பொருளாளர் கார்த்திக், மாணவர் சங்க மாவட்ட தலைவர் பவித்ரன், விசிக மாநகர பொருளாளர் காஜாமைதீன், துணைச்செயலாளர் வேலுநாயக் கர் ஆகியோர் கலந்து கொண்ட னர்.