districts

img

“தமிழ் தேர்வு எளிமையாக இருந்தது” +2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் உற்சாகம்

கோவை, மே 5- தமிழ் தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததாக கோவை யில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தெரி வித்தனர். தமிழகம் முழுவதும் வியாழனன்று முதல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. கோவை மாவட் டத்தில் இந்த தேர்வை 35 ஆயிரத்து 33 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக 119 தேர்வு மையங்கள் மாவட் டம் முழுவதும் அமைக்கப்பட்டு உள்ளது. இத்தேர்வின் முதல் நாளான வியாழனன்று தமிழ், பிரெஞ்சு, ஜெர்மென் உள்ளிட்ட மொழிப்பாட தேர்வுகள் நடைபெற்றன. இதில், தமிழ் உள்ளிட்ட மொழிப்பாட தேர்வுகள் எளிமையாக இருந் ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.