ஈரோடு, ஜூலை 1- ஈரோடு மாநகராட்சியில் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தப் போட்டடம் முடிவிற்கு வந்தது. ஈரோடு மாநகராட்சியில் பொது சுகாதார பணிகளை ஒப்பந்த முறையில் கொடுப்பதற்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. டெண்டர் ஆவணத் தில் வேலை இழப்பு, ஊதியம் குறைப்பு ஆகியவை தொழிலாளர்களுக்கு பாத மாக இருந்தது. மேலும் 50 வயதிற்குட் பட்டவர்களுக்கு மட்டுமே பணி வழங் கப்படும் என கூறப்பட்டது. எனவே, இத்தகைய தொழிலாளர் விரோத தனியார் ஒப்பந்த முறையைக் கைவிட வேண்டும் என சிஐடியு உள் ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு வேலை நிறுத்த அறிவிப்பு வெளி யிட்டது. இதன் மீதான தொழிலாளர் துறை யின் சமரச பேச்சுவார்த்தைகள் பலன ளிக்கவில்லை. இதனால் ஜுன் 23ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட் டம் நடைபெற்றது. இதன் காரண மாக நாளொன்றுக்கு சுமார் 250 டன் குப்பைகள் அகற்றப்படுவது தடைப் பட்டது. மேலும், தூய்மைப் பணியா ளர்கள் போராட்டம் காரணமாக ஈரோடு மாநகரம் முழுவதும் மலை போல் குப்பைகள் தேங்கியும், ஆங்காங்கே சாக்கடைகள் அடைபட்டும், சுகாதார மற்ற நிலை உருவானது. தூய்மைப் பணியாளர்களின் நியாமான கோரிக் கைகளை மாநகராட்சி நிர்வாகம் பேச்சு வார்த்தையின் மூலம் ஏன் தீர்வு காண மறுக்கிறது என பொதுமக்களே வெளிப் படையாக பேச ஆரம்பித்துவிட்டனர்.
இது ஈரோடு மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்திலும் எதிரொலித்தது. பொதுமக்களின் அதிருப்தி அதிக ரித்து வருவதும், தூய்மைப் பணியாளர் களின் உறுதி மிக்க போராட்டமும், ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்திற்கு அழுத்தம் ஏற்பட்டது. இந்நிலையில், வேறுவழியின்றி வெள்ளியன்று மாலை மாநகராட்சி நிர்வாகம், தொழிற் சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. மாநகராட்சி அலுவ லகத்தில் நடைபெற்ற இப்பேச்சு வார்த்தையில் மேயர், ஆணையாளர், மாநகராட்சி பொறியாளர், நகர் நல அலுவலர், துணை மேயர், 2 மண்டல தலைவர்கள் மற்றும் சில மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிஐடியு, ஏஐடியுசி, தொமுச, ஆதித் தமிழர் பேரவை, தேமுதிக, சுய உதவிக் குழு பணியாளர் நல சங்கம், தொழி லாளர் விடுதலை முன்னணி ஆகிய தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகி களும் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் தொழிலாளர் களுக்கு வேலை இழப்பு இருக்காது. ஊதியக் குறைப்பு இருக்காது, 50 வயதைத் தாண்டிய தொழிலாளர்களும் பணி புரிவார்கள். 60 வயது வரை அவர்கள் பணி புரிவதில் எந்த தடை யும் இல்லை. அனைவருக்கும் வேலை கொடுக்கப்படும் உள்ளிட்ட உத்தர வாதம் அளிக்கப்பட்டன. நகரம் முழு வதும் தேங்கியுள்ள குப்பைகளை இதே தொழிலாளர்கள் தான் அப்புறப் படுத்து வர். ஆகையால், வேலை நிறுத்த நாட் களுக்கும் தூய்மைப்பணியாளர் களுககு ஊதியம் வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இக்கோரிக்கைகளை பரிசீலிக் கவும், அரசின் உயர்மட்ட அலுவலர் களுக்கு பரிந்துரைக்கவும், அதன் மூலம் தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைக் கவும் வழிவகை செய்யப்படும் என்றும் நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையேற்று 8 நாட்களாக நடை பெற்று வந்த வேலை நிறுத்தம் முடி விற்கு வந்தது. சனியன்று தூய்மை பணி யாளர்கள் வழக்கம் போல் பணிக்குத் திரும்பினர்.