உடுமலை, நவ.1- உடுமலை அருகே போலி ஆவ ணங்கள் மூலம் ஜம்புக்கல் மலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது குறித்து புகார்கள் குவிந்த நிலை யில், புதனன்று கோட்டாச்சியர் தலை மையில் விசாரணை நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே அமராவதிநகர், ஆண்டிய கவுண்டனூர், எலையமுத்தூர், கல்லாபுரம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில், 6 ஆயிரம் ஏக்கர் பரப்பில் ஜம்புக்கல் மலை அமைந்துள்ளது. இங்கு கடந்த 1970 - 71 ஆம் ஆண்டில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 350 நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு, தலா இரண்டு ஏக்கர் வரை, பல்வேறு விதிமுறைகளுடன் ‘நிபந்தனை பட்டா’ வழங்கப்பட்டன. இதில் மரங் களை அழிக்கக்கூடாது. 3 அடி ஆழத் திற்கு கீழ் நிலத்தை தோண்டக் கூடாது. நீர்நிலைகளை அழிக்கக் கூடாது. நிலங்களை விற்பனை செய் யக்கூடாது உள்ளிட்ட விதிமுறைகள் இடம் பெற்றிருந்தன. பருவமழை காலத்தில் மானாவாரி விவசாயம் நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால், விவசாயப் பணிகள் நடைபெறவில்லை. இந்நிலையில், சட்டத்திற்கு புறம்பாக விதிமுறை களை மீறி, போலி ஆவணங்கள் மூல மாக, நிலபரிவர்த்தனை மேற் கொள்ளப்பட்டது. அரசுக்கு சொந்த மான பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு, மலைப்பகுதி அழிக்கப் பட்டது. மேலும், பட்டா உரிமையாளர் களாக உள்ள விவசாயிகளையும் அனுமதிக்காமல், சிலர் வழித் தடத்தை அடைத்தும், மிரட்டியும் வருகின்றனர். ஜம்புக்கல் மலைத் தொடரையும், பசுமையும் காக்க வேண்டும் என கடந்த 4 ஆண்டு களுக்கு மேலாக விவசாயிகள் பல் வேறு போராட்டங்களை நடத்தி வரு கின்றனர். உயிருடன் உரிமையாளர் களும், வாரிசுகளும் உள்ள நிலை யில், 700க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங் கள், வருவாய்த்துறை வழங்கு வது போல, வாரிசு, நில உரிமை சான்று போலியாக தயாரிக்கப்பட்டு, போலியான நபர்களை கொண்டு மோசடியாக பத்திரப்பதிவு செய்யப் பட்டு, வருவாய்த்துறை ஆவணங் களில் மாற்றம் செய்யப்பட்டு, ஜம்புக்கல் மலை ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. மலைப்பகுதியை ஆக்கிரமித்தவர்கள், போலி ஆவ ணங்கள் வாயிலாக விவசாயிகள் நிலத்திற்குள்ளே நுழைய முடியா மல் தடுத்து மிரட்டி வருகின்றனர். கண்டிசன் பட்டாவில் விற்பனை செய்ய முடியாது.
உரிமையாளர் கள், வாரிசுகள் விவசாயம் செய்யா விட்டால், நிலத்தை அரசு எடுத்துக் கொள்ளும் என்ற விதி உள்ளது. இதனையும் மீறி, போலி ஆவணங் கள் மூலம் ஏழை விவசாயிகளின் நில உரிமை பறிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசுக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும் ஆக்கி ரமித்து, பசுமையான மலை அழிக் கப்பட்டு வருகிறது. இதில் நடந்த மோசடிகள், போலி ஆவணங்கள் குறித்தும், உரிமையாளர்கள் பெயர் ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது, பதிவுத்துறையில் ஆவணம் பதிவு, வருவாய்த்துறையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து 200க் கும் மேற்பட்ட ஆவணங்களின் நகல் களை உடுமலை கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணனிடம் விவசாயி கள் மனுவாக அளித்தனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு மற்றும் விவசாயிகள் நிலங் களை மீட்கவும், இந்த மோசடியில் தொடர்புடைய அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என விவசாயிகள் வலியுறுத் தினர். இதனடிப்படையில், புதனன்று அமராவதி நகரிலுள்ள ஆண்டிய கவுண்டனுார் கிராம நிர்வாக அலு வலர் அலுவலகத்தில் கோட்டாட் சியர் தலைமையில் விசாரணை நடை பெற்றது. புகாரளித்த விவசாயிகள் மற்றும் சம்பந்தப்பட்ட உரிமையாளர் கள், உரிய ஆவணங்களுடன் வரு வாய் கோட்டாச்சியர் ஜஸ்வந்த் கண்ணன் முன்பு நேரில் ஆஜராகினர். விரிவான விசாரணைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித் தனர்.