திருப்பூர், ஜூலை 31 - பெருமாநல்லூர் அருகே கன்னிமார் தோட்டத்தில் பல ஆண்டுகள் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை ஆக்கிர மித்துள்ள கோயில் குழுவினர், பழிவாங்கும் எண்ணத்தில் பல இன்னல்களை ஏற்படுத்தி வருவதாகவும், அந்த பாதையை மீண்டும் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக் கள் கோரியுள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்களன்று வாராந்திர மக்கள் குறை தீர்க் கூட்டம் நடைபெற்றது. இதில் கன்னிமார் தோட்டம் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கன்னி மார் தோட்டம் வீதியில் பல்வேறு மாவட்டங்க ளில் இருந்து குடிபெயர்ந்து வசித்து வரும் மக்கள் சுமார் 90 குடும்பங்கள் உள்ளன. எங்கள் பகுதியை சுற்றி மற்ற தெருக்களில் வசித்து வருவோர் உள்ளூர் மக்கள். நாங்கள் குடிபெயர்ந்த நாளிலிருந்து எங்கள் பகுதிக் கென்று எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரப்படாமல் இருந்தது. பல ஆண்டுக ளாக சிரமப்பட்டு பின்னர் தான் மின்வாரியம் மற்றும் குடிநீர் வசதி செய்து தரப்பட்டது. இந்நிலையில் எங்களை ஊருக்குள் விடா தபடி மற்ற பகுதிகளை இணைக்கும் முக்கிய பாதையை அங்கு வசிக்கும் பழனி குடும் பத்தை சேர்ந்தோர் ரங்கநாதன் மற்றும் அவ ரது நண்பர்கள் அடைத்து வைத்துள்ளனர். ஏற் கனவே பழனி குடும்பத்தினர் இதே பாதையை பல முறை ஆக்கிரமித்து அடைத்து வைத்தனர். பல முறை எங்கள் பகுதி மக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்த பிறகு ஆர்டிஒ, விஎஒ மற்றும் காவல் துறையி னர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். 2021 ஆம் ஆண்டு உள்ளூரை சேர்ந்த மக் கள் இணைந்து கட்டிய செல்வ விநாயகர் கோவிலை விரிவுபடுத்துவதாக, நாங்கள் பயன்படுத்தும் பாதையில் சுற்றுச்சுவர் கட்ட ஆரம்பித்தனர். இதை எங்கள் பகுதி மக்கள் தற்காலிகமாக தடுத்து நிறுத்தி வைத்தனர். இதனால் எங்கள் பகுதி மக்கள் மீது கோயில் குழுவை சேர்ந்தோர் பழிவாங்கும் எண்ணத் தில் பல இன்னல்களை ஏற்படுத்தி வருகின்ற னர். அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை அபகரித்து, பிறரை தூண்டிவிட்டு எங்கள் பாதையை முழுமையாக அடைக்கும் முயற்சியில் இக்குழுவினர் முயற்சித்து வரு கின்றனர்.
இதுகுறித்து ஜூலை 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தோம். மாவட்ட ஆட்சியர் இரண்டு நாட்களில் ஆக்கிர மிப்பை அகற்றி தற்காலிகமாக தீர்வு அளிப்ப தாக உறுதி அளித்தார். ஆனால் எட்டு நாட்க ளாக பாதை முழுவதும் அடைக்கப்பட்டுள் ளது. நாங்கள் தற்போது தனியாருக்கு சொந்த மான பாதையை பயன்படுத்தி வருகிறோம். எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத ஊரின் கடைக்கோடியில் உள்ள பாதையில் இரண்டு கிலோமீட்டர் சுற்றி சென்று வருகிறோம். இந்த வழியானது இரவு நேரங்களில் சமூகவிரோதி கள் குடித்துவிட்டு அமர்ந்திருக்கும் வழியா கும். இதன் வழியாக இரவு நேரத்தில் பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், வேலை முடித்து வரும் பெண்கள், குழந்தைகள் சென்று வரமுடியாத நிலை உள்ளது. எனவே எங்கள் பகுதி மக்களின் பிரதான வழியான 382/19 மற்றும் 388/6 வழியாக செல்லும் புறம் போக்கு நிலத்தில் பொதுப்பாதை ஆக்கி ரமிப்பை அகற்றி 30 ஆண்டு காலமாக எங்கள் மக்களின் கோரிக்கையான தார்ச்சாலை வசதி செய்து தர வேண்டும் எனக் கூறப்பட் டுள்ளது. இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் கூறு கையில், கன்னிமார் தோட்டம் பகுதியில் அர சுத்தரப்பில் பலருக்கு பட்டா வழங்கப்பட்டுள் ளது. இப்பொழுது அடைத்து வைக்கப்பட் டுள்ள இடம் நத்தம் புறம்போக்கு. ஆனால் பட் டாவில் வழிதடம் என்று இல்லை. ஏற்கனவே ஒரு முறை பாதையில் கல் வைக்கப்பட்டு. அப் பொழுது அந்த கல்லை அகற்றியுள்ளாம். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தி விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.