திருப்பூர், பிப்.16- மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் (சிஐ டியு) வியாழனன்று திருப்பூர், உடுமலை, பல் லடம் ஆகிய பகுதிகளில் 200க்கும் மேற்பட் டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடந்த காலங்களில் ஏற்பட்ட புயல் வெள்ள பேரிடர் காலங்களில் ஒப்பந்த தொழி லாளர்கள் தங்கள் உயிரையும் பணைய வைத்து பணி செய்தார்கள். இதை புறந்தள் ளும் வகையில் மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களே இல்லை என்று தமிழக அர சும், மின்வாரியமும் கூறுவதை கண்டித்தும். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல ஆண்டுக ளாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த பணியாளர் களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 2018 ஆம் ஆண்டு பிப்.22 ஒப்புகொண்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின்படி தினக்கூலி ரூபாய் ரூ.380 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து இந்த சாலை மறியல் நடை பெற்றது. திருப்பூரில் நடைபெற்ற சாலை மறிய லுக்கு, தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் பாபு தலைமை தாங்கி னார். இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் கே. ரங்கராஜ் வாழ்த்தி பேசினார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாவட்ட செயலா ளர் ஆர்.நாகராஜன், பொருளாளர் கே.மோ கன் தாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் திரளானோர் பங்கேற்ற னர்.
உடுமலை
உடுமலை மின்வாரிய தலைமை அலுவல கம் முன்பு சிஐடியு திட்ட துணைத் தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் மண்டல செயலாளர் கோபா லகிருஷ்ணன், சிஐடியு மாவட்ட துணை செய லாளர் ஜெகதீசன் உள்ளிட்ட திரளான ஒப்பந்த தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
பல்லடம்
பல்லடம் மேற்பார்வை பொறியாளர் அலு வலகத்தின் முன்பு சாலை மறியல் நடைபெற் றது. இந்த சாலை மறியலுக்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு பல்லடம் ஒன் றிய செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கி னார். சிஐடியு மாநில குழு உறுப்பினர் சம்பத் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பல்லடம் ஒன்றிய செயலாளர் பரமசிவம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் திரளான ஒப்பந்த தொழிலாளர்கள் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டவர் களை சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி. சுகுமாரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் செ.முத்து கண் ணன், சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ரங்க ராஜ் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித் தனர்.