districts

img

வேலைவாய்ப்பு முகாம்: அமைச்சர் நேரில் ஆய்வு

திருப்பூர், ஜூன் 4- திருப்பூரில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு முகாம் ஞாயிறன்று குமரன் மகளிர்  கலைக்கல்லூரியில் நடை பெற்றது. இம்முகாமில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி, கல்லூரி மாணவ, மாண வியர்கள் பயன்பெறும் வகையில்,  தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங் களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. இந்நிலையில் திருப்பூர் குமரன் மகளிர் கலைக் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த வேலைவாய்ப்பு முகாமில், திருப்பூர் மாவட்டத்தில் 2020- 2023 கல்வியாண்டில் இறுதி யாண்டு பயின்று வரும் 25 கல் லூரிகளிலிருந்து 950 மாணவ, மாண வியர்கள் பதிவு செய்துள்ளனர்.  இந்த முகாமில் 46க்கும் மேற் பட்ட தனியார் தொழில் நிறுவ னங்கள் பங்கேற்றன. மேலும், ஆட் களைத் தேர்வு செய்ய வருகை புரியும் நிறுவனங்களுக்கு தங்கு மிடம், குடிநீர் வசதி, உணவு உள் ளிட்ட போன்ற அடிப்படை வசதிகள்  செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர்கள் வசதிக்காக பழைய  பேருந்து நிலையம், புதிய பேருந்து  நிலையம், ரயில் நிலையம் ஆகிய இடங்களிலிருந்து கல்லூரிக்கு இல வசமாக பேருந்து வசதி உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப் பட்டிருந்தன.   இந்த வேலைவாய்ப்பு முகாமை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆய்வு மேற்கொண் டார்.  இந்த ஆய்வின் போது, நான் முதல்வன் திட்டத்தின் மேலாளர் சிங்கதேவன், திருப்பூர் குமரன் மகளிர் கலைக்கல்லூரி முதல்வர்  வசந்தி, தொடர்புடைய அரசு அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.