districts

img

அரசு போக்குவரத்தில் ஒப்பந்தப் பணியாளர் நியமனமா? காங்கேயத்தில் சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூலை 20 - அரசு போக்குவரத்துத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் நிய மனம் செய்வதைக் கண்டித்து காங்கேயம் அரசுப் பேருந்து கிளை முன்பாக ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. புதன்கிழமை அதிகாலை 5.30 மணியள வில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போக் குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனத்தை கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டது. சிஐடியு சங்கக் கிளைத் தலைவர் விஸ்வ நாதன் தலைமை ஏற்றார். கிளைச் செயலா ளர் அசோக்குமார் கண்டன உரையாற்றினார். ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் நாச்சி முத்து, சிஐடியு திருப்பூர் மாவட்டக்குழு உறுப் பினர் கே.திருவேங்கடசாமி ஆகியோர் இந்த போராட்டத்தை ஆதரித்துப் பேசினர். திருப் பூர் மண்டல மத்திய சங்க நிர்வாகி வின்சென்ட் நன்றி கூறினார்.