கோவை, மே 9 - கோவை விமான நிலையத்தில் 40 வயதை கடந்த 47 ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணி நீக் க்கம் செய்யப்பட்டதை கண்டித்து, விமான நிலைய வளாகத்தில் சிஐ டியு சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மகாராஷ்டிரா மாநிலம் பூனேவை தலைமையிடமாக கொண்ட அனுமன் கெய்க்வாட் என் பவருக்கு சொந்தமான பி.வி.ஜி என்ற நிறுவனம் ஒப்பந்த அடிப்ப டையில் சுமார் 140 விமான நிலை யங்களில் தூய்மைப் பணியாளர் களை பணியமர்த்தியுள்ளது. அந்த வகையில் பி.வி.ஜி நிறுவனத்தின் கீழ் கோவை விமான நிலையத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட தூய் மைப் பணியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் பி.வி.ஜி நிறுவனம் 40 வயதை கடந்த 47 தூய்மைப் பணியாளர் களை கடந்த பிப்ரவரி மாதம் திடீ ரென பணி நீக்கம் செய்தது. இதனையடுத்து சிஐடியு சார் பில், கோவை விமான நிலைய நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த் தையில் ஒன்றிய விமானத்துறை அமைச்சரே இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க முடியும் என விமான நிலைய நிர்வாகம் கை விரித்தது. ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண் டித்து சிஐடியு சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், வியாழனன்று தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவை விமான நிலைய வளாகத்தில் தர்ணா போராட்டத்திற்கு சிஐடியு அமைப் பினர் ஏற்பாடு செய்த நிலையில், பீளமேடு காவல்துறையினர் அவர் களை தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப் போது பணி நீக்கப்பட்ட தொழிலா ளர்கள், விமான நிலைய நிர்வா கம் மற்றும் தூய்மைப் பணிக்கு ஒப் பந்தம் எடுத்த பி.வி.ஜி நிறுவனம் என மூன்று தரப்பும் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக போலீ சார் உறுதி அளித்தனர். இதைய டுத்து தர்ணா போராட்டத்தை கைவிட்ட சிஐடியு அமைப்பினர் பி.வி.ஜி நிறுவனத்தின் தொழிலா ளர் விரோத நடவடிக்கையை கண் டித்து தூய்மைப் பணியாளர்களை ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு கோவை மாவட்டத் தலை வர் எஸ்.மனோகரன், மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கோல்டுவின்ஸ் கிளைச் செயலா ளர் சுப்பிரமணி, சாலை போக்குவ ரத்து தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட சிஐடியுவுடன் இணைக்கப்பட்ட சங்கங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டு பிவிஜி நிறுவனத் தின் தொழிலாளர் விரோத நடவ டிக்கைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அப்போது பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களை உடனடியாக பணி அமர்த்தவும், பணி நீக்கம் செய்யப்பட்ட நாட்களுக்கு சேர்த்து ஊதியம் வழங்கிடவும் வலியு றுத்தி முழக்கங்களை எழுப்பினர்.