உதகை, பிப்.11 இறந்ததை தின்று வாழும் பாறு கழுகுகள் குறித்து அரசு பள்ளி மாண விகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பொம்மலாட்டம் நிகழ்ச்சி நடைபெற் றது. இந்தியாவில் கழுகுகளின் எண் ணிக்கை தொடர்ந்து, பல காரணங் களால் குறைந்து வருகிறது. 1990 ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் பரவ லாக காணப்பட்ட பாறு கழுகுகள் தற்போது, தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்திலும், கேரளா வயநாட்டி லும், வடக்கு கர்நாடகா ஒரு சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகின் றன. இதனையடுத்து, தமிழ்நாட்டில், கழுகுப் பாதுகாப்பு பணிகளை மேற் கொள்ள முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் தலைமையில் 10 பேர் கொண்ட மாநில அளவிலான பாறு கழுகுப் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டு, இதை காப்பாற்ற பல்வேறு நடவடிக்கையில் எடுக்கப் பட்டு வருகிறது. இதேபோல் தனியார் பறவை நல அமைப்புகளும் இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின் றன. இந்நிலையில் அருளகம் எனப் படும் இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு மூலம் நீலகிரி மாவட்டம் எப்பநாடு, கூக்கல்தொறை, சின்ன குன்னூர், உல்லத்தி உள்பள பல் வேறு இடங்களில் அரசு பள்ளி மற்றும் பொது மக்களுக்கு பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது.
இதுகுறித்து இயற்கை பாது காப்பு அமைப்பினர் கூறுகையில், பாறு கழுகுகள் செழித்தால் பாரும் செழிக்கும் ‘பாறு’ எனச் சங்கத் தமிழி லும், இருளர் பழங்குடியினராலும், ‘பத்’ என தோடர் மக்களாலும், ‘ரண பத்து’ என படுகு மக்களால் ‘பிணந் தின்னிக் கழுகு’ எனச் சமவெளி மக் களாலும் அழைக்கப்படும் பறவை இனம், இறந்த விலங்குகளை உண்டு வாழ்கிறது. காட்டைத் தூய்மைப் படுத்துவதோடு நமக்கும் நோய் நொடி பரவாமல் காக்கும் அருமை யான பணியினைச் செய்து வருகிறது. பாறு கழுகுகள் தற்போது மிகவும் அரிதாகி வருகிறது. கால்நடைகளுக் குப் பயன்படுத்திய வலி மருந்து களின் வீரியமானது. இறந்த மாட்டை உண்டபோது இப்பறவைகளின் அழி விற்கு பெரிதும் காரணமாய் அமைந் தது. எனவே இந்த பறவைகளுக்குத் தீங்கு செய்யும் கால்நடை மருந்து களான டைக்குளோபினாக், அசிக்கு ளோபினாக், நிமுசிலாய்ட்ஸ், புளூ நிக்சின், கீட்டோபுரோபேன் ஆகிய மருந்துகளை தவிர்த்து, பாதுகாப் பான மாற்று மருந்துகளான மெலாக் சிகம், டோல்பினமிக் ஆசிட் மருந்து களையும், சித்தா, ஆயுர்வேதா, ஓமியோ ஆகிய மருந்துகளை பயன் படுத்த வேண்டும். இயற்கையாக இறந்த விலங்குகளைப் புதைக்கா மலும், எரிக்காமலும் பாறு கழுகுக ளுக்கு உணவாக்க வேண்டும். பாறு கழுகு பாதுகாப்பிற்கென இனப் பெருக்க மையங்களை அமைக்க வேண்டும், என தெரிவித்தனர்.