தருமபுரி, பிப்.13- தலித் மக்கள் மீது சாதிய பாகுபாடு காட்டும் போது, எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை உரிய முறை யில் பயன்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது. குடிமக்கள் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு, பட்டியல் மற்றும் பழங்குடியினர் சமூகத்திற்கான இலவச சட்ட ஆலோசனை கூட்டம் தருமபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. சிவிஎம்சி செயலாளர் த.லதா தலைமை வகித் தார். தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச. கருப்பையா சிறப்புரையாற்றினார். சிவிஎம்சி தலைவர் எஸ். கே.மூர்த்தி, துணைத்தலைவர் வி.எஸ்.குமரேசன், நிர்வாகி எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இக்கூட்டத் தில், தலித் மக்கள் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்படும் போது எஸ்சி/எஸ்டி, வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முறையாக பயன்படுத்த வேண்டும். தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி தீர்ப்பில் நீதிமன்றம் உத்தரவுபடி, பாதிக்கப்பட்ட வர்களுக்கு அரசு வேலை, ரூ.10 லட்சம் நிவாரணம், பொருளா தார மேம்பாடு போன்றவற்றை தமிழக அரசு உடனடியாக செய்து கொடுக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி, வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் தலைமை யில் நடத்தப்படும் விழி கண்குழு கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.