உடுமலை, டிச.26- சின்னவீரம்பட்டி ஊராட்சியில் குடி நீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இது குறித்து உடுமலை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று மனு அளித் துள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது, சின்னவீரம் பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஐந்து மற்றும் ஆறாவது வார்டுகளான விஜய் நகர், சேகர் புரம், சித்தாண்டீஸ்வரர் (லே அவுட்), குமார் நகர், மலர்விழி நகர், கணேஷ்நகர் மற்றும் அண்ணாமலை நகர் ஆகிய பகுதிகளில் முறையான தார்ச் சாலைகள் இல்லாததால் மழைக் காலங்களில் சாலைகள் சேறும் சகதியு மாக உள்ளன. இப்பகுதிகளில் சரிவர குடிநீர் வருவதில்லை. மேலும், தெரு மின் விளக்குகள் எரிவதில்லை. ஊராட்சி பகுதிகள் முழுவதும் சில தார்ச்சாலைகள் பழுதடைந்தும், குண் டும் குழியுமாய் உள்ளதால் போக்குவ ரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் ஆழ்குழாயில் தண்ணீரை கூடுதல் நேரம் விட வேண்டும். இதே ஊராட்சியில் உள்ள சேகர் புரம் பகுதி யில் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை கட்டி தரவேண்டும். புதிய நூலகம் அமைக்க வேண்டும். சாலையில் இருபு றமும் புதர்கள் அகற்றாப்படாமல் உள்ளது. மேலும் சாக்கடைகளில் தண் ணீர் தேங்குவதால் கொசு உற்பத்தி அதிகமாகிறது. எனவே சாலையோரங் களில் இருக்கும் புதர்களை அகற்றி சாக் கடையைச் சுத்தம் செய்து ஊராட்சி பகுதி முழுவதும் கொசு மருந்து அடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உடுமலை நகரச் செய லாளர் தண்டபாணி, கிளைச் செயலாளர் ரத்தினசாமி உட்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.