சேலம், பிப்.14- சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் இலவச தள்ளு வண்டி வழங்க வேண்டும் என சிஐ டியு சாலையோர விற்பனையாளர் கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சிஐடியு சாலையோர விற்பனை யாளர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட பேரவை வி.பி.சிந்தன் நினைவகத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.விஜயலட்சுமி தலை மையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட தலைவர் டி.உதயகுமார் பேரவையை துவக்கி வைத்தார். இப்பேரவையில், மாவட்டம் முழுவ தும் உள்ள சாலையோர வியாபாரி களை கணக்கெடுத்து, அடையாள அட்டை, வியாபார சான்றிதழ்களை வழங்கி, முறையாக சாலையோர வியாபாரிகள் சங்கங்களின் ஆலோ சனைகளோடு தேர்தல் நடத்தி, வெண் டிங் கமிட்டி அமைக்க வேண்டும். 2014 ஆம் ஆண்டு சாலையோர பாது காப்பு மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தின்படி, அதே இடத்தில் வியா பாரம் செய்ய அனுமதிக்க வேண் டும். சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் இலவச தள்ளு வண்டி வழங்க வேண்டும். ஏற்காடு சாலையோர வியாபாரிகளின் கடை களை வைக்க அமைச்சர், ஆட்சியர் ஏற்றுக்கொண்ட அடிப்படையில் உட னடியாக அனுமதி வழங்க வேண் டும். தள்ளுவண்டிகளை வைத்து பிழைப்பு நடத்தி வரும் வியாபாரி களை நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்த கூடாது. சாலை யோர வியாபாரிகள் சட்டத்தை அனைத்து கிராம பஞ்சாயத்திலும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் மாவட்ட தலைவராக வி.விஜயலட் சுமி, செயலாளராக தனசேகர், பொருளாளராக எஸ்.கார்த்தி, 3 துணைத்தலைவர்கள், 3 துணைச் செயலாளர்கள் உட்பட 20 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய் யப்பட்டது. சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.வெங்கடபதி நிறை வுரையாற்றினார்.