தருமபுரி, ஜன.21- நீதித்துறையில் உள்ள 5 ஆயிரத் திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங் களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண் டும் என நீதித்துறை ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங் கத்தின் மாவட்ட அளவிலான ஆலோ சனைக்கூட்டம் தருமபுரியில் நடைபெற் றது. அப்போது, சங்கத்தின் மாநிலத் தலைவர் செந்தில்குமார் செய்தியாளர் களிடம் பேசுகையில், நீதித்துறையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு பணி உயர்வு வழங்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 90 காலிப்பணி யிடங்கள் உள்ளன. மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங் கள் உள்ளன. இந்த காலிப்பணியிடங் களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண் டும். தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாலை நேரங்களில் போதிய பேருந்து வசதிகள் இல்லை. எனவே, மாலை நேரங்களில் கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும். அதேபோல மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல வீல் சேர் வசதியை ஏற்ப டுத்தி தர வேண்டும். புதிய பென்சன் திட் டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நீதித் துறையில் பத்தாண்டுகளாக பணி யாற்றி தற்பொழுது பணி நீக்கம் செய் யப்பட்டவர்களை பணியமர்த்தி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என்றார். இக்கூட்டத்தில் சங்கத்தின் மாவட் டச் செயலாளர் அரங்கண்ணல், மாவட்ட துணைத்தலைவர்கள் மணி, வாசுகி, இணைச்செயலாளர்கள் விஜயகுமார், ஜார்ஜ், சாகுல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.