districts

img

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி கிட்டத்தான்

நாமக்கல், பிப்.4- ராசிபுரத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடை பெற்ற “கிட்டத்தான்” ஓட்டப்போட்டியில் பலர் கலந்து கொண் டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் எஸ்ஆர்வி இண்டர்நேச னல் பள்ளி சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி  2 ஆவது “கிட்டத்தான்” ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில்,  ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகளுடன் பெற் றோர்களும் கலந்து கொண்டனர். இந்த ஓட்டமானது ஒரு  கிலோ மீட்டர், 2 கிலோ மீட்டர், 3 கிலோ மீட்டர், 5 கிலோ  மீட்டர் மற்றும் சிறுவர்களுக்கான 500 மீட்டர் என 5 பிரிவு களின் கீழ் நடைபெற்றது. பள்ளி அருகே இருந்து துவங் கிய கிடத்தான் ஓட்டம், பட்டணம் சாலையில் சென்று மீண்டும்  பள்ளியில் நிறைவடைந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலி யுறுத்தி நடைபெற்ற இப்போட்டியை பள்ளியின் சேர்மன் கணேஷ்பாபு துவக்கி வைத்தார். இதில், அனைத்து பிரிவு களிலும் 3 மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு, பாராட் டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன.