districts

img

இலவச வீட்டுமனை பட்டா வழங்கிடுக மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலியுறுத்தல்

தருமபுரி, மார்ச் 30- வீடற்ற மாற்றுத்திறனாளி களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய மாநாடு, மோளையானூர் சமுதாய கூடத் தில் மாவட்டக்குழு உறுப்பினர் கே.சேட்டு தலைமையில் நடைபெற்றது.  மாவட்ட செய லாளர் எம்.மாரிமுத்து மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாநிலத் தலைவர் தெ.வில்சன் சிறப்புரையாற்றினார். மாவட்ட தலைவர் கே.ஜி.கரூரான், மாவட்ட பொருளா ளர் ஜி.தமிழ்செல்வி ஆகியோர் வாழ்த்தி பேசி னர். இதில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக  வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளி களுக்கு 4 மணிநேர வேலை வழங்கி முழு ஊதியம் வழங்க வேண்டும். வீடற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின்  குடும்ப அட்டைகளை அந்தியோதையா அன்னா யோஜனா திட்டத்தின் இணைத்து அரசி வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் சென்று வர ஏதுவாக சாய்தளம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டில், ஒன்றிய தலைவராக வெள் ளையன், துணைத்தலைவராக சசிகலா, ஒன் றிய செயலாளராக கிருஷ்ணவேணி, துணைச் செயலாளராக கே.சேட்டு, பொருளாளராக மகேஸ்வரி உள்ளிட்ட 21 பேர் கொண்ட ஒன் றியக்குழு தேர்வு செய்யப்பட்டது.