districts

img

நீண்ட கால அனுபவத்தை கொண்டு பட்டா வழங்க வலியுறுத்தல்

தருமபுரி, ஜன.24- நீண்ட கால அனுபவத்தை கொண்டு குடியிருக்கும் வீடு மற் றும் விவசாய நிலங்களுக்கு பட்டா  வழங்க மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியரி டம் பொதுமக்கள் மனு அளித்துள்ள னர். இதுகுறித்து அம்மனுவில் கூறி யிருப்பதாவது, தருமபுரி மாவட் டம், நல்லம்பள்ளி வட்டத்திற்குட் பட்டவை டொக்குபோதன அள்ளி, பூவல்மடுவு ஆகிய கிராமங்கள். இங் குள்ளவர்கள் சுமார் 100 ஆண்டுக ளுக்கும் மேலாக, பல தலைமுறைக ளாக வீடுகட்டி குடியிருந்து, அங் கேயே விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே, குடி யிருக்கும் வீட்டிற்கும், நிலத்திற் கும் பட்டா வழங்குவதாக 1984, 1996,  2001, 2007, 2020 ஆகிய ஆண்டுகளில் வருவாய்த்துறையினர் நில அளவை செய்தனர். தமிழக அர சாணை எண்.854ன்படி, மாவட்ட அளவிலான குழுவால் 2007 ஆம் ஆண்டு ஆக.31 ஆம் தேதிக்குள் பட்டா வழங்க உத்தரவு பிறப்பிக் கப்பட்டது. மேற்படி நிலத்தில் உள்ள எங்கள் வீட்டிற்கு பட்டா வழங்குவ தில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என ஊராட்சி மன்றத்திலும் அப்பொழுது தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. மேலும், 2021 ஆம் ஆண்டு அக்.2 ஆம் தேதியிலும், பட்டா வழங்க சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. தற்பொழுது நீண்ட நாள் அனுபவத்தை அடிப்படையாக கொண்டு பட்டா வழங்க தமிழக அரசு அரசாணை ஆணை வெளியிட் டுள்ளது. நாங்கள் குடியிருந்து வரும் வீட்டை தவிர எங்களுக்கு வேறு வீடு எதுவும் இல்லை. பட்டா நிலம் எது வும் இல்லை. மேற்படி நிலத்தை தவிர எங்களுக்கு வாழ்வாதாரம் வேறு எதுவும் இல்லை. வறுமை  கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகி றோம். நாங்கள் குடியிருக்கும் வீட் டிற்கு மின் இணைப்பு பெற்றும், அர சுக்கு வீட்டு வரி செலுத்தியும் வருகி றோம். அரசாங்கத்தால் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி, இலவச கழிப்பிட வசதி, தெரு மின் விளக்கு வசதி ஆகியவைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது வரை பட்டா வழங்கப்படவில்லை. மேற்படி வீடு களுக்கு பட்டா வழங்க ஆவண செய்ய சென்னைக்கு கோப்புகள் அனுப் பப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின் றனர். தற்பொழுது எங்கள் பகுதி யில் பெரும்பாலானோர் அரசு வழங் கும் இலவச வீட்டு திட்டத்தில் பய னாளியாக தேர்வு செய்யப்பட்டுள் ளனர். ஆனால், வீட்டுமனை பட்டா யின்றி மேற்படி திட்டத்தில் வீடு கட்ட இயலாத நிலையில் உள்ளனர். இந்நிலையில், செவ்வாயன்று வருவாய்த்துறை உள்ளிட்ட உயர திகாரிகள் சர்வே எண்:293/7ல் அரசு  கையகப்படுத்துவதாக அளவீடு செய்துள்ளனர். மேற்படி நிலங்க ளில் உள்ள வீடுகள், தென்னை, மா, புளிய மரங்கள் என அனைத்தும்  அகற்றுவதாக கூறுகிறார்கள். ஏழை களாகிய எங்களுடைய அனுபவத் தில் இருக்கும், வாழ்வாதாரமான நிலத்தை தவிர்த்து வேறு இடத்தில் அரசுக்கு நிலத்தை ஆர்ஜிதம் செய்து கொள்ளலாம். மேலும், நாங் கள் நீண்ட காலமாக குடியிருக்கும் வீடு மற்றும் நிலத்தை, அரசு ஆணைப் படி எங்களுக்கு பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில்  வலியுறுத்தப்பட்டுள்ளது.