districts

img

திண்டுக்கல் மலைக்கிராமங்களில் இரவு நேரத்தில் சாலைகளில் யானைகள் நடமாட்டம்

திண்டுக்கல், மே 12- திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி  வனச்சரகத்திற்குட்பட்ட அமைதிச்சோலை யில் ஒற்றை யானை நடமாட்டத்தால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாத நிலை இருந்  தது. இதே போல் கன்னிவாடி அருகேயுள்ள நாயோடையிலும், பண்ணைப்பட்டி அருகேயுள்ள அணைப்பகுதியிலும் கூட  யானைகள் முகாமிட்டு இருந்தன. இந்நிலை யில் இந்த யானைக்கூட்டத்தில் 11 குட்டி யானைகள் இருப்பதாகவும், அவைகளை பாதுகாக்க ஒரு யானை அக்கம் பக்கத்தில் சுற்றித்திரிந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த  யானையை சின்னக்கொம்பன் என்று அப்பகுதி மக்கள் பெயர் வைத்து அழைக்கத் துவங்கினர். இந்நிலையில் இந்த யானை விவசாய நிலங்களை அழிப்பது, தனியாக வருபவர்களை தாக்கி வருகிறது. இதனால் ஒரு வனப்பாதுகாவலர் உள்ளிட்ட 3 பேர் பலியாகினர். இதனையடுத்து கன்னிவாடி, பண்ணைப்பட்டி பகுதி மக்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில்  போராட துவங்கினர். இதனையடுத்து வனத் துறை அதிகாரிகளுடன் விவசாயிகள் சங்க தலைவர்கள் என்.பெருமாள், தயாளன், நாக ராஜன், சிபிஎம் ஒன்றியச்செயலாளர் கே.எஸ்.சக்திவேல் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனையடுத்து சின்னக்கொம்பனை விரட்ட இரண்டு சின்னத்தம்பி, காலிப் ஆகிய கும்கி யானை களைக் கொண்டு வந்து யானைகளை விரட்ட ஏற்பாடு செய்தனர். இந்த இரண்டு  கும்கி யானைகளால் தற்போது பண்ணைப்பட்டி அருகே முகாமிட்டிருந்த யானைகள் அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் பண்ணைப்பட்டி கோம்பை மலையின் மேல் பகுதி கிரா மங்களான கே.சி.பட்டி மற்றும் சோலைக் காடு உள்ளிட்ட பல மலைக்கிராமங்களில் இரவு நேரத்தில் யானைக்கூட்டம் சுற்றித் திரிகின்றன. கே.சி.பட்டியிலிருந்து சோலைக்காடு செல்லும் சாலையில் யானை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் வெளியே வர அச்சப்பட்டு வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள். வனத்துறை அதி காரிகள் இந்த யானைகளை கட்டுப்படுத்த முன்வர வேண்டும் என்று ஊராட்சித்தலை வர் ஜீவா இளையராஜா மற்றும் மன்ற  உறுப்பினர்கள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.