districts

img

டாப்சிலிப்பில் யானைகள் பொங்கல்

கோவை ஜன.17- பொள்ளாச்சி டாப்சிலிப் யானை கள் முகாமில் வனத்துறையினர் யானை பொங்கலை வைத்து கொண்டாடினர். பொள்ளாச்சியை அடுத்த டாப் சிலிப்பில் கோழிகமுத்தி யானை முகாம் உள்ளது. இங்கு ‘யானைப்  பொங்கல்’ விழா நடைபெற்றது. வனத்துறையினர் நடத்திய இந்த  பொங்கல் விழாவை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.  ஆண்டுதோறும் கோவை மாவட்டம் டாப்சிலிப்பில், யானைப் பொங்கல் விழா கொண்டாடப் படுகிறது. இந்தாண்டு, கோழிக முத்தி யானைகள் முகாமில், பொங்கல் விழா நடைபெற்றது.  ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்கவதேஜா தலைமை வகித்தார். முகாமில், அலங்கரிக்கப்பட்ட யானைகள் வரிசையாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, பழங்குடியின மக்கள், பொங்கல் வைத்து வழி பாடு செய்தனர்.தொடர்ந்து, அனைத்து யானைகளுக்கும் பொங்கலுடன் கரும்பு, தேங்காய்  மற்றும் பழவகைகள் வழங்கப் பட்டன. இதனை கண்டு களிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து பார்த்தனர்.  கோழிகமுத்தி யானைகள் முகா மில், ‘மொத்தம், 26 வளர்ப்பு யானைகள் உள்ளன. இவற்றில், கலீம், முத்து, கபில்தேவ் உள்ளிட்ட யானைகள் சத்தியமங்கலத்தில் காட்டு யானைகளைப் பிடிக்கச்  சென்றுள்ளன. மற்ற 23 யானை களுக்கு பொங்கல் வைத்து வழி பாடு செய்யப்பட்டது. இந்நிகழ் வில், உதவி வனப் பாதுகாவலர் செல்வம், வனச்சரகர்கள் சுந்தர வேல், புகழேந்தி, மணிகண்டன் உட்பட வனத்துறையினர் பங்கேற் றனர்.